17/01/2021

தமிழக மக்கள் சாதி வெறியர்களா... ரவீந்திரன் துரைசாமியின் அபாண்டமான பிரச்சாரம்...

தமிழக மக்கள் சகிப்புத்தன்மைக்கும் நல்லிணக்கத்துக்கும் எடுத்துக்காட்டானவர்கள். ஆனால், 'தமிழ்நாட்டின் பெரும்பாலான மக்கள் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கொடுப்பதை எதிர்ப்பார்கள்' என்கிற கட்டுக்கதை பிரச்சாரத்தை நடத்திக் கொண்டிருக்கிறார் இனவெறி பீடித்த ரவீந்திரன் துரைசாமி. 

இனவெறி மனநோய் பீடித்த ரவீந்திரன் துரைசாமி...

தொலைக்காட்சி விவாதங்களில் ஒரு புள்ளிவிவரப்புலி போன்று காட்டிக்கொள்ளும் ரவீந்திரன் துரைசாமி, எப்போதும் குத்துமதிப்பான வாக்குவிவரங்களை அள்ளி வீசிக்கொண்டிருப்பவர் ஆகும். இவர் சொல்லும் எந்த புள்ளிவிவரத்துக்கும் அறிவியல் பூர்வமான, ஆய்வு அடிப்படையிலான ஆதாரம் எதுவுமே இருக்காது.

தமிழ்நாட்டில் பட்டியலினத்தவர், சிறுபான்மையினர் தவிர மற்ற எந்தவொரு சமுதாயத்தின் மக்கள் தொகை குறித்தும் அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரம் ஏதும் கிடையாது. ஆனாலும், தமிழ்நாட்டின் ஒவ்வொரு சமூகத்தின் வாக்குவிகிதமும் இதுதான் என ஒரு குத்துமதிப்பான கணக்கினை எல்லா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் ‘கீறல் விழுந்த ரெக்கார்டு போல’ மீண்டும் மீண்டும் வாந்தி எடுத்துக் கொண்டிருப்பார் ரவீந்திரன் துரைசாமி.

வன்னியர்கள் முன்னேறிவிடக் கூடாது என்கிற ஆழ்மன விகாரம் கொண்டவர் இந்த நபராகும். மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களின் போராட்டத்தால், வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கிடைத்துவிடுமோ என்கிற அச்சத்தில், மன ஆற்றாமையில் இப்போது அல்லும் பகலும் வன்னியர்களுக்கு எதிரான கருத்துக்களையே பைத்தியம் பிடித்துப்போய் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

"வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கக் கூடாது. அப்படி கொடுத்தால் மற்ற சமூகங்கள் அதனை எதிர்ப்பார்கள்" இதுதான் இந்த பைத்தியக்காரனின் ஒருவரி செய்தி ஆகும். இதற்கு பலவிதமான கட்டுக்கதைகள், முன்னுக்குப்பின் முரணான புள்ளிவிவரங்களை இட்டுக்கட்டி காலை முதல் இரவு வரை எல்லோரிடமும் பகிர்ந்துகொண்டு இருக்கிறார்.  

சென்னையில் இயங்கும் பெரும்பாலான பத்திரிகையாளர்கள், தலைமைச் செயலகத்தில் உள்ள அதிகாரிகள், தமிழக உளவுத்துறையினர், பல அரசியல்வாதிகள், தொலைக்காட்சி பேச்சாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு தொடர்ச்சியாக வாட்ஸ்ஆப் மூலமும், குறுஞ்செய்தி மூலமும் இந்த விஷக் கருத்துகளை தினமும் பகிர்கிறார். பலருக்கு தொலைபேசி மூலம் இதையே பேசி தொல்லை செய்கிறார். ஊரில் இருக்கும் எல்லா யூடியூப் சேனல்களையும் தொடர்புகொண்டு, இந்த விவகாரம் தொடர்பாக 'எனது பேட்டியை போடுங்கள்' என கெஞ்சுகிறார்.

இதன் உச்சமாக, தமிழ்நாடு அரசுக்கு வேறு வழியில்லாவிட்டால் "வன்னியர்களுக்கு 8% இடஒதுக்கீடு கொடுக்கலாம்" என்று பிச்சை போடுகிறார் இந்த இழிபிறவி.

இப்படி ஒருநாளின் 24 மணி நேரத்தில், விழித்திருக்கும் எல்லா நேரமும் வன்னியர் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார், இந்த இனவெறி மனநோய் பீடித்த ரவீந்திரன் துரைசாமி...

இதுபோன்ற கழிசடைகள் தமிழ்நாட்டின் ஊடகங்களில் அரசியல் விமர்சகர்களாக பங்கேற்பது தமிழ்நாட்டின் சாபக்கேடு...

மனநோயர் ரவீந்திரன் துரைசாமியின் அபாண்ட பிரச்சாரம் எந்த அளவுக்கு மோசமானது, உண்மைக்கு புறம்பானது  என்பதை அடுத்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.