08/01/2021

பிரமிடு தமிழர் கட்டியது... எகிப்தில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள்...

 


16 டன் எடையுள்ள துல்லியமாகச் செதுக்கப்பட்ட கற்களை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி, 13 ஏக்கரில், மயிரிழைகூட மாறாது நேர்த்தியாக, செப்பமாக பிரமிடு அமைத்தவர்கள் தமிழர்கள்.

350 அடி உயரத்துக்கு 260 கோணத்தில், மேலேறிச் செல்ல அம்புபோல் நீண்ட பாதையைக் குடைந்து உருவாக்கியவர்கள் தமிழர்கள்.

மற்ற இனமெல்லாம் நாடோடிகளாய் திரிந்த காலத்தில் நாகரிகத்தின் உச்சத்தில், நகர நாகரிகத்துடன், பொறியியல் நுட்பத்துடன், மூடநம்பிக்கைத் துளியும் இன்றி வாழ்ந்த இனம் தமிழினம்.

ஆனால், ஆரியர்களின் பண்பாட்டு படையெடுப்பினால் மூடநம்பிக்கைகளில் மூழ்கி இன்று அடிமை வாழ்க்கை, அவல வாழ்க்கை வாழ்கிறான்.

பிரமிடு என்பது தூய தமிழ்ச்சொல்..

எகிப்தை ஆண்டவர்கள் தமிழர்கள்..

பிரமிடு என்பது தமிழ்ச் சொல்..

இறந்தவர்களை எரிப்பது ஆரியர் வழக்கம். ஆனால், இறந்தவர்களை புதைப்பது தமிழர் (திராவிடர்) மரபு. எரிக்கும் இடம் சுடுகாடு, புதைக்கும் (இடும்) இடம் இடுகாடு.

எளிய மனிதர்கள் இறந்தால் சிறுகுழி வெட்டி அதில் இட்டு புதைப்பர். அதற்கு சிற்றிடு (சிறு +இடு) என்று பெயர்.

அரசன் போன்ற உயர்நிலை மக்கள் இறக்கும்போது, பெரும் அளவில் கட்டடம் எழுப்பி அதில் இடுவர். பெரிய அளவில் இடப்படுவதால் (அடக்கம் செய்யப்படுவதால்) அது பெரும்+இடு = பெருமிடு என்று அழைக்கப்பட்டது. அதுவே ‘பிரமிடு’ என்று ஆனது.

ஆக, பிரமிடு என்பது தூய தமிழ்ச்சொல். தூயத் தமிழ்ச் சொல் ஆளப்பட்ட இடம் தமிழர்கள் வாழ்ந்த இடமாகும் அங்குக் கட்டப்பட்டதும் அவர்கள் கட்டியவை என்பது உறுதியாகிறது.

எகிப்து தமிழர் மண், அங்கு ஆண்டவர்கள் தமிழர்கள், கிளியோ பாட்ரா தமிழ்ப் பெண் பொன்றவற்றை அடுத்தடுத்து அறிவோம்.

எகிப்தில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள்.. ஆண்டவர்கள் தமிழர்கள்..

ஆதாரங்கள் இதோ...

கி.மு.6000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர் அங்கு வாழ்ந்தனர். Comparison of Badalian and primitive Indian Races என்ற நூலில் பிரெந்தர் ஸ்தொதியார் என்ற ஆய்வாளர், 1927ல் எகிப்தில் தோண்டியெடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் தமிழர்களுடையவை என்பதை ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.

நைல் நதிக்கரையில் வாழ்ந்த ஜெர்சியர்கள் தமிழர் மரபில் வந்தவர்கள் என்று ஒக்ரான் (Autran) என்ற ஆய்வாளர் உறுதி செய்கிறார்.

Edward pokoke (1604-1691) என்ற ஆய்வாளர், Indian in Greece என்ற நூலில் சிந்து சமவெளி மக்களும், எகிப்தில் வாழ்ந்தவர்களும் ஒரே இனமக்கள், அவர்கள் சிந்து வெளிப் பகுதியிலிருந்து, பெர்சிய வளைகுடாவைக் கடந்து Oman, Hadramont, Yeman கரை வழியாக எகிப்து, நபியா, அபிசினியா பகுதியில் பரவினர் என்கிறார்.

Adolf Erkman (1854-1937) Life in ancient Egypt என்ற நூலில் பாண்டிய நாட்டவர்கள் (தமிழர்கள்) எகிப்தில் பரவி எகிப்திய நாகரிகத்தை உருவாக்கினர் என்கிறார்.

Asiatic researchers (vol.III.1702) வெளிவந்த கட்டுரையில் British Lt.colonel wilford, பல சான்றுகளைக் காட்டி, பழங்கால தமிழர்கள் எகிப்தில் குடியேறியதைத் தங்கள் குடியேற்ற நாடாக்கினர் என்கிறார்.

Heinrich Kari Brugsh - History of Egypt என்ற நூலில் தமிழர்கள் 8000 ஆண்டுகளுக்கு முன் எகிப்தில் குடியேறி தங்கள் கலை மற்ற உன்னத நாகரிகத்தை அங்கு நிலை நாட்டினர்.

இதே கருத்தை Bengsch Bey  என்ற எகிப்திய வரலாற்றாசிரியரும் கூறுகிறார்.

எகிப்து நாகரிகம் பண்டைய தமிழர் நாகரிகம் என்பது அய்யத்திற்கு இடமின்றி தெரிகிறது, என்கிறார். Louis Jacolliot (1837 - 1890) என்ற பிரஞ்சுக்காரர் Bible dane l Inde) LIliane Hornbergar என்ற பிரஞ்சு அறிஞர் எகிப்தின் முதல் வமிசத்து மன்னன் சிந்து சமவெளிப் பகுதியிலிருந்து வந்த தமிழர் என்கிறார்.

தமிழ் மன்னர்கள் பெயர் மற்றும் கிளியோபாட்ரா பற்றி அடுத்து பார்ப்போம்....

எகிப்தில் ஆண்ட மன்னர்கள் தமிழர்கள் அங்கு ஆண்ட மன்னர்கள், “தொட்டகாமன்” “அகநாடன்: போன்ற பெயருடையவர்கள். இப்பெயர்கள் தூயத் தமிழ்ச்சொற்கல் என்பதன் மூலம் மன்னர்கள் தமிழர்கள் என்பது உறுதியாகிறது.

அதே போல் கிளியோபாட்ரா ஒரு தமிழ்ப்பெண். அவரது கருநிறமே அதற்குச் சான்று. மேலும் அப்பெயர் ஒரு தூயத் தமிப்பெயரின் திரிபு.

கிளியோ பத்தரை என்பதே கிளியோ பாட்ரா என்று மாறியது. கிளிபோன்ற அழகி. பத்தரை மாற்று தங்கம் என்னும் பொருள் உடையது அது.

அதே போல் மெசப்பட்டோமியா பகுதியில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள். மெசப்பட்டோமியா என்பது, தூயத் தமிழ்ப்பெயரின் திரிபு.

மிசைப்பட்டணம் என்பதே அப்படி மாறியது...

மிசையென்றால் மேடு. மேட்டில் உள்ள நகரம் என்பது அதன் பொருள். அதுவே மிசப்பட்டிணம் -----> மெசப்பட்டோமியா என்று மாறியது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.