21/01/2021

தமிழ் இளைஞர்கள் எழுச்சி பெற வேண்டும்...

நாம் அனைவரும் தமிழர் மட்டுமே என்ற உணர்வில்..

இந்திய திராவிட கம்பியூனிச தலித்தீய லாட்ட  மாயையிலிருந்து வெளிவர வேண்டும்.

இந்த போலி தேசம் எதையும் நமக்கு விட்டுவைக்கப் போவதில்லை.

வேற்றுமையில் ஒற்றுமையாம்.. நல்லா இருக்குடா உங்க பிச்சக்கார ஒற்றுமை...

நமது ஆற்றுமண் லாரியில் ஏற்றி திருடியாச்சு.

நமது மொழி இந்தியனால் சமசுகிருதப் படுத்தியாச்சு.

நமது பெயர்கள் இந்தியிலும் அரபியிலும்  ஆங்கிலத்திலும வச்சாச்சு.

நமது  உழவுக் காணிகளை மனைகளாக்கி கான்கிரீட் வீடுகள் கட்டியாச்சு.

நமது பழந்தமிழர் காடுகள் மலைகள் செழிப்புநிலங்கள்  மலையாளத்துக்கு தாரை வார்த்தாச்சு.

நமது ஆறுகள் பக்கத்து மொழிக்காரனுக்கு உரிமையாச்சு.

நமது அரசாளும் உரிமை வேற்று மொழியானுக்கே உரிய உரிமையாச்சு.

எமது நிலம் இந்தியன் அணுவுலை நிறுவவும் எரிகுழாய்கள் பதிக்கவும் நியூட்ரினோ பகுமானத்திற்கும் நிலக்கரி திருடவும்  களவாடப்பட்டது.

நமது இளசுகளுக்கு மானவுணர்வே வந்து விடக்கூடாது என்பதற்காக மது கிரிக்கெட் சினிமா தல தளபதி போதைகளில் புதைச்சாச்சு.

எவன்டா என் தலைவன்? எங்கேடா எமது தலைவன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.