06/02/2021

திமுக-காங் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறது...

 


காங்கிரஸ் 63 தொகுதிகள் கேட்கிறார்கள், கருணாநிதி அதிகட்சம் 60 வரைதான் தர முடியும் என்கிறார். உடன்பாடு எட்டவில்லை.

 "காலில் பிணைத்திருந்த சங்கிலி அறுபட்டது" என என்னமோ கருணாநிதி ஒரு அறிக்கைவிட்டார்.

அப்போது திமுக தொண்டடர்களை பார்க்கணுமே... வெடி போடுகிறார்கள், மிட்டாய் கொடுக்கிறார்கள்.. ஏனென்றால் ஈழ மக்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டதாம்...

அடுத்த நாள், டெல்லியில் டி.ஆர்.பாலுவையும், தயாநிதிமாறனையும் சோனியா அழைத்து அமர வைக்கிறார். 

ஓர் உதவியாளர் ஒரு பெரிய  ட்ராலியை தள்ளிக்கொண்டு வருகிறார். சோனியா சொன்னார், "இது என்ன தெரியுமா? இது எல்லாமே நீங்கள் ஊழல் செய்து சம்பாதித்ததற்கான ஆவணங்கள். 

நீங்க செய்த பாவங்கள் அனைத்தையும் நாங்க சிலுவை போல சுமந்து கொண்டிருக்கிறோம். 

மூன்று சீட் அதிகமா கேட்டா தர மாட்டாராமா அவர்?" என சொன்னார். 

இவர்கள் இருவரும் தாத்தாவிடம் வந்து நடந்ததை சொன்னார்கள். தாத்தா உடனே சொன்னார், "இம்முறை காங்கிரஸை சேர்ந்த 63 நாயன்மார்கள் சட்டசபையில் இடம் பிடிப்பார்கள்"  என்று...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.