22/05/2021

இலுமினாட்டி - பூமியின் 33° இணைக்கோட்டின் அமானுஷ்யம்...

 


பூமியின் அச்சிலிருந்து 33° அளவெடுத்து ஒரு இணைக்கோடு வரைந்து அதில் குறுக்கிடும் இடங்களையும் அந்த இடங்கள் சார்ந்து வரலாற்றில் நடந்த நிகழ்வுகளையும் ஆராய்ந்து பார்ப்பீர்களானால் ஆச்சரியத்தில் உறைந்து போவீர்கள்.

பூமியின் 33° இணைக்கோட்டுப் பகுதி அத்தனை முக்கியத்துவமுள்ளது.

எண் கணித நிபுணர்களிடம் 33 ஆம் எண்ணின் சிறப்பு என்ன என்று கேட்பீர்களானால் அவர்கள் பல்வேறு காரியங்களை அடுக்கிக் கொண்டே போவார்கள்.

அமானுஷ்ய சடங்குகள் நிறைந்த ப்ரீமேசன்ஸ் இயக்கத்தின் மிக உன்னத நிலையாக 33-டிகிரி போற்றப்படுகிறது.

இந்த நிலையை எட்டியவர்களை 33° ஃப்ரீமேசன் என்றழைப்பார்கள்.

இவர்களது பழமை வாய்ந்த போனிக்ஸ் கோவிலும் சரியாக பூமியின் 33° இணைக்கோட்டில் தான் வருகிறது.

உலகின் ஆகப்பெரிய அமானுஷ்யங்களை சுமந்து கொண்டிருக்கும் பெர்முடா முக்கோணமும், அள்ள அள்ளக் குறையாத மர்மங்களை உள்ளடக்கிய கிரேட் பிரமிடும் இதே இணைகோட்டில் தான் இருக்கிறது.

செழிப்பான, நாகரீகமிக்க தேசமாயிருந்து முற்றிலும் கடலில் மூழ்கி அழிந்து போனதாக நம்பப்படும் அட்லாண்டிஸ் தீவும், விவிலியத்தில் கடவுளுக்கு எதிரான சைத்தானின் நகரமாக சொல்லப்படும் பாபிலோனும் இந்த 33° இணைக்கோட்டுப் பகுதியில் தான் இருந்தது.

சரி எல்லாம் இருந்துட்டுப் போகட்டும் அதனால் என்ன என்கிறீர்களா?

33-ஆம் எண் சைத்தானுக்கு உகந்த எண்களிலேயே மிக முக்கியமான எண்ணாகும்.

எனவே தனக்கு மிகவும் உகந்த அந்த இடத்தில் தனக்கு இரத்த பலிகள் கொடுக்கப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று சைத்தான் விரும்புவதாக சொல்லப்படுகிறது.

எனவே உலகின் சக்தி வாய்ந்த மனிதர்கள் சிலர் வேண்டுமென்றே சுய லாபத்துக்காக அந்த இடத்தில் விபத்துகளையும், யுத்தங்களையும் நிகழ்த்தி சைத்தானுக்கு நரபலிகளை கொடுப்பதாக சதித்திட்ட கோட்பாட்டாளர்கள் (Conspiracy Theorists) குற்றம் சாட்டுகிறார்கள்.

ஆனால் இவர்கள் குற்றச்சாட்டுக்கு அதிகாரபூர்வ ஆதாரங்கள் ஏதுமில்லை.

ஆதாரங்கள் ஏதுமில்லாவிட்டாலும் சம்பவங்களின் புள்ளிகளை இணைத்துப் பார்க்கும் போது நமக்கும் பயத்தில் முதுகுத்தண்டு சில்லிடவே செய்கிறது.

இரண்டாம் உலகப்போரில் அணுகுண்டு வீசப்பட்ட ஹிரோஷிமா நாகசாகி இந்த 33° இணைக்கோட்டில் தான் இருக்கிறது.

ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால் அந்த நாட்டின் தலைநகரையோ அல்லது இராணுவ தளங்களையோ தானே தகர்க்க வேண்டும்.

எந்த முக்கியத்துவமும் இல்லாத ஹிரோஷிமா நாகசாகி மீது குண்டு வீசப்பட்டதேன், அது சைத்தானை திருப்திப்படுத்தத் தான் என்று சதித்திட்ட கோட்பாட்டாளர்கள் வாதிடுகிறார்கள்.

வட ஆப்பிரிக்காவில் இனக்கலவரங்கள் நடைபெற்று அனுதினமும் மக்கள் இரத்தம் சிந்தி மரிக்கும் பகுதிகள் இந்த இணைக்கோட்டில் தான் வருகிறது.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜான். F.கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டது சரியாக 33 டிகிரி அளவுள்ள இடத்தில் தான்.

உலகம் முழுவதும் இந்த33° இணைக்கோட்டுப் பகுதியில் 600 கோடி மக்கள் வசிக்கிறார்கள்.

எப்போதும் துப்பாக்கி சத்தம் கேட்கும் பகுதிகளான ஈராக், இஸ்ரேல், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஜம்மு காஷ்மீர் போன்ற பகுதிகள் இந்த இணைக்கோட்டில் தான் வருகின்றன.

1947 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ரோஸ்வெல் என்ற நகரத்தில் வேற்று கிரகவாசிகளின் விண்கலம் நொறுங்கி அதில் பயணம் செய்த ஏலியன்களின் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இடமும் இதே இணைக்கோட்டில் தான் இருக்கிறது.

விவிலியத்தில் இறைவனுக்கும் சைத்தானுக்கும் கடைசி யுத்தமாக அர்மெகதோன் நடைபெறப் போகும் இடம் என்று நம்பப்படும் மகிடோ மலையும் இந்த 33 டிகிரி இணைக்கோட்டில் தான் இருக்கிறது.

இயேசு கிறிஸ்து மரித்து உயிர்த்தது தனது 33 வது வயதில் தான், சைத்தான் சொர்க்கத்தில் இருந்த இறை தூதர்களில் மூன்றில் ஒரு பங்கை தன் பக்கம் இழுத்துக் கொண்டதாக விவிலியம் சொல்லுகிறது. அது சரியாக 33.33 சதவிகிதமாகும்.

இந்த 33 என்ற எண் இலுமினாட்டிகளின் கடவுளுக்கு பிடித்த எண். பிரிமேசன் என்ற அமைப்பை பற்றி ஒரு பதிவில் சொல்லியிருக்கேன் நியாபகம் இருக்கா.

அதில் அதிகபச்ச உயர்நிலை 33° தான்.

இதை பற்றி இன்னும் நிறைய இருக்கு அப்புறம் பார்க்கலாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.