20/06/2021

காதல் என்பது வார்த்தைகளால் வர்ணிக்க இயலாதது..

 


பல பரிமாணங்களில் உலாவி வருவது..

உண்மை காதலை உணர்ந்தவருக்கு அது உயிரானது..

மெய்யான காதலில் மூழ்கியவர்களுக்கு அது உரிமையானது..

காதலை உணராமல் வெறுப்பவர்களுக்கு அது பொய்யானது..

ஒரு தலை காதலாக இருப்பவர்களுக்கு அது புதிரானது..

காதலே செய்யாமல்  வாழ்பவர்களுக்கு அது விசித்திரமானது..

காதலை ஆராய்பவர்களுக்கு அது வினோதமானது..

எப்படி இருந்தாலும் காதல் வாழ்வானது சாகும் வரை அள்ள அள்ள குறையாமல் அளந்து கொண்டே போகும் அளவில்லாதது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.