05/06/2021

காதல் தோல்வி...

 


லவ் பெயிலியருக்கு அப்பறம்...

ஒரு ஆறு மாசம் கழிச்சு

லவ்வர சந்திக்கற

வாய்ப்பு கெடச்சுது...


ஏன் இப்படி பண்ணுன கேட்டதுக்கு

எனக்கு அந்த நேரத்துல

என்ன முடிவு எடுக்கறதுனே தெரிலடா...


தெரிஞ்சோ தெரியாமலோ 

உனக்கு துரோகம் பண்ணிட்டேன்..

என்ன மன்னிச்சிரு..


எதாவது கோவத்துல 

என்ன பழி வாங்கிடாதடா னு 

கண்ணீரோட அழுதா..


அதான் எல்லாம் முடிஞ்சு போய்

ஆறுமாசம் ஓடி போச்சே..

இனி பழி வாங்கி என்னடி ஆகப்போகுது...


ஒண்ணே ஒன்னு 

செய்வியானு கேட்டேன்....

பதில் எதுவும் பேசாம

முகத்தையே பாத்தா...


பயப்படாத 

தப்பா எதுவும் கேக்கல...


நீ எங்க இருந்தாலும் 

நான் செத்த நியூஸ் கேட்டா 

ரெண்டு சொட்டு கண்ணீர் விட்டு

யாருக்கும் தெரியாம அழுவியானு கேட்டேன்...


ஒரு பதிலும் இல்ல...


உண்மையா லவ் பண்ணி இருந்தா சத்தியமா அவ மனசு

ஆல்ரெடி செத்துப் போயிருக்கணும்...


என்னோட எல்லா கோவமும் சேர்ந்த

அந்த ஒரு கேள்வியே 

பல தடவை அவளை கொண்றிருக்கும்....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.