28/06/2021

எதை விதைத்தாயோ.. அதையே அறுவடை செய்கிறாய் பெண்ணே...

 




ஓடி ஓடி காதலித்தவன் ஓடும்
இடம் தெரியாமல் ஓரம் கட்டப்பட்டவன் - நேசிக்கப்பட்ட உன்னால்... 

உற்று நோக்கி விலகி சென்றாய் 
வீதியில் கதறுகிறாய் - பாதியில் வந்தவனால்..

வசதி பார்த்து 
கண்கள் கட்டிக் கொண்டு 
உயிராய் காதலித்தவனுக்கு 
மரண கடிதம் அனுப்பினாய்..

இன்று நீ நம்பி சென்றவனால் 
தினமும் மரண படியில் உறங்குகிறாய்..

நீ இழந்ததை எண்ணி - பழைய காதலை..

அன்பும் அக்கறையும் பணத்தால் வாங்கப்படுபவை அல்ல...

உள்ளத்தாலும் உணர்வுகளாலும் வழங்கப்படுபவை...

நீ அறுவடை செய்துக் கொண்டிருக்கும்
ஏமாற்றத்தை எல்லாம்...
எனக்குள் விதையாய் விதைத்து 
சென்றவை தான் என்பதை மறவாதே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.