23/07/2021

உன்னால் ஏமாற்றப்பட்டவன்...

 




எனக்குள் உன் நினைவும்
உனக்குள் என் நினைவும்
இருந்தும் தனித்தே வாழ்ந்தோம்...

இருவரும் காதலுடன்...

உன் நண்பன் வந்து சொன்னது 
உனக்கு திருமணம் என்று....

கண்களில் கண்ணீர் பெருக்க....

அன்று முதல் உன்னை நானும்
என்னை நீயும் காணாத நாம்...

இன்று உன்னை சந்தித்தேன்
கையில் ஒரு மழலையுடன்....

உன் மழலைக்கு என் பெயரின்
சாயலில் பெயர் வைத்துள்ளாய் ....

ஏனடி பெண்ணே....

நீ மறந்த காதலை எண்ணி
போலி கண்ணீர் விடாதே...

அமைந்த உன் வாழ்கையை
வசந்தமாக வாழ்ந்துக் கொண்டு...

என் முன்னால் நடிக்காதே...
அதுவே போதும்...

உன் நலம் விரும்பும் 
உன்னால் ஏமாற்றப்பட்டவன்.....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.