25/07/2021

சதிகாரியே...

 



உனக்கென்ன நீ சுகமாக 
வேறொருவனுடன் 
உன் திருமண வாழ்க்கையை 
தொடங்கி ஒரு தாயாகவும் மாறி விட்டாய்... 

நான் விசாரித்ததில்...
உன் குடும்பத்து பெண்களுக்கு
காதல் என்பது ஒரு
பொழுதுபோக்கு விளையாட்டாமே...

என்னுயிர் நண்பர்களே...

நீங்கள் என்னை இனி பார்பதாக
இருந்தால்...

அவளை நான் முதன் முதலில்
சந்தித்த பேருந்து நிலையத்திலோ...

அவள் தினந்தோறும் வந்து செல்லும்
இரயில் நிலையத்திலோ...

அவளுக்கு குங்குமமிட்ட
கோவிலிலோ...

அவள் எனக்கு முதன்முதலில்
முத்தமிட்ட ஆற்று பாதையிலோ...

அவள் தினந்தோறும் பூ
வாங்கும் அந்த அக்காவிடமோ...

எங்காவது நான் இருப்பேன்...

இல்லை என்றால்...

நான் இறந்திருப்பேன்...

இறந்த சுவடுகள் கூட இல்லாமல்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.