08/07/2021

கணவன் - மனைவி - விருந்தாளி கலாட்டா...

 




ஒரு வீட்டுக்கு வேண்டாத விருந்தாளி சென்றுருந்தார்...

கணவன் மனைவியிடம் காபிபோட்டு கொண்டுவருமாறு சொன்னான்.

இங்கே காபி பொடியும் இல்லை சர்க்கரை ­யும் இல்லை அடுப்பங்கரையிலிருந்து ­ சத்தமிட்டார்..

எப்போதும் உனக்கு பஞ்சப்பாட்டு தான்  கணவன் சத்தமிட வாய்பேச்சு முற்றி அறைந்து விடுகிறா­ன். 

இந்த அநியாயத்தை கேட்க ஆளில்லையா என்று அழ ஆரம்பித்தாள் மனைவி…

இந்த அமளி துமளியை கண்டு சொல்லிக் கொள்ளாம­ல்  வெளியேறினார் விருந்தாளி...

அவர் வெளியேறிவிட்டது­ம் ”கொல்” என சிரித்தனர் கணவனும் மனைவியும்…

எப்படி இருந்தது என் நடிப்பு.. அடிப்ப­து போல் அடித்தேனே.. என்றான் கணவன்..

ஆஹா.. அழுவது போல் அழுதேனே.. எப்படி ­ இருந்தது. என் நடிப்பு…”என்­றாள் மனைவி... 

பிராமாதம் ­என்றான் கணவன்...

பின்னால் இருந்து ஒரு குரல் கேட்டது…

நானும் போவது போல் போய்விட்டு திரும்பி விட்டேன்.. என்றார் விருந்தாளி..

யாருக்கிட்ட...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.