09/07/2021

என் இதயத்தின் வலி கண்ணீராக...

 




நல்லவை தீயவையென
பிரித்து
பார்க்க தெரிந்தும்...

எல்லாவற்றிக்கும் ஆசைப்படும்
மழலையை போல ஆசைப்பட்டேன்...

ஆசைக்கும் எல்லையுண்டு
என்பதை மறந்தேன்...

அதனால்தான் என்னவோ...

எல்லையில்லா கண்ணீருக்கு
சொந்தமானேன்...

என் கண்ணீருக்கு சிலர்
காரணமாக இருந்தாலும்...

யாருடைய கண்ணீருக்கும்
இன்றுவரை நான் காரணமில்லை...

இதயத்தின் வலி
கண்களில் கண்ணீராக...

இதயவலியை நான்
யாருக்கும்
கொடுத்ததில்லை...

அதுதான் என் சந்தோசம்...

வலிகளை உணர்ந்த நான்
யாருக்கும்
வலிகளை கொடுத்ததில்லை.....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.