04/08/2021

உன் வருகைக்காக காத்திருப்பேன்...

 




காலம் முழுவதும்
சேர்ந்திருப்பேன்...
உன் நிழலாக...

நீ இமை மூடும் வரை
காத்திருப்பேன்...
உன் கண்களாக...

நீ சுவாசிக்கும் காற்றில்
கலந்திருப்பேன்...
ஒரு அணுவாக...

நீ உறங்கினாலும்
விழித்திருப்பேன்...
உன் கனவாக...

நீ என்னை சேரும்
வரை காத்திருப்பேன்...
உன் வருகைக்காக...

உன் வாசத்துடன்
இணைந்துருப்பேன்...
ஒரு மலராக...

நீ என்னை வெறுத்தாலும்
வாழ்ந்திருப்பேன்...

ஒரு பிணமாய்
என் கல்லறையில்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.