05/08/2021

என் உயிர் தோழியே...

 




முதன் முதலில் நான்...
கண்ணீர் விட்டு அழுதது...

உறவுகளின் 
மரணத்திற்காக அல்ல...

உயிர் நட்பின்
மரணத்திற்காக...

இன்று வரை
நிலைகொள்ளாமல்...

தவிக்கிறது என் மனம்...

எனக்கு தெரியும்...

இன்று வரை நீ
என்னை சுற்றி வட்டமிட்டு
கொண்டுதான் இருக்கிறாய்...

என்னால் உணரமுடிகிறது...
பார்க்கத்தான் முடியவில்லை...

பாடாய் படுகிறது மனம்...
நானும் வருகிறேன்...

உன் நினைவுகளோடு
சிறிது காலம் வாழ்ந்துவிட்டு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.