13/09/2021

உன் நினைவுகளை சுமக்கிறேன் கருவறையை போல்...

 




நீ என்னை நினைக்க
வேண்டாம் எப்போதும்...

நான் எப்போதும்
உன்னையே நினைப்பேன்...

நீ
உணர்ந்தாலே போதும்...

நீ என்னிடம் பிரிவை
மட்டுமே விரும்புகிறாய்...

நமக்குள் பிரிவும்
இருந்துகொண்டே இருக்கிறது...

பறிக்க ஆள் இல்லாத
பூக்கள் வாடிவிடும்...

எனக்கு ஆறுதல் சொல்ல
நீ இல்லையென்றால்...

என்
இதயம் வாடிவிடும்...

உன்னோடு
இருந்த நாட்களை...

கருவறையை
போல சுமக்கிறேன்...

உன்னையும்
உன் நினைவுகளையும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.