26/09/2021

மரணத்தில் விளம்பில் நான்...

 




உன்னை நான் தினம்
தொடர்ந்து வந்த போதெல்லாம்...

என்னை தொந்தரவு
செய்யாதே என்றாய்...

அன்று முதல் 
உன் கண்களில் படாமல்
உன்னை தொடர்ந்துக்
கொண்டிருக்கிறேனடி...

எதார்த்த சந்திப்பில்
என்னை கேட்கிறாய்...

என்னை
மறந்துவிட்டாயா என்று...

உனக்காகவே
விலகி நின்றேன் அன்று...

மரணத்தின் விளிம்பில் நிற்பதாய்
உணர்கிறேன் இன்று...

உன்
வார்த்தையை கேட்டதும்...

இப்போது சொல்
உன்னை
நான் தொடரவா...

இல்லை நான் மொத்தமாக
தொலைந்து போகவா...

சொல்லடி பெண்ணே....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.