01/10/2021

இறக்கி வைக்க முடியாத சுமையடி உன் நினைவுகள்...

 



நீயும் நானும் ஈருடல் ஓருயிராய்
இருந்த காலங்களை மறந்து விட்டாயா...

உன் எதார்த்த சந்திப்புகளில்
என் நலம் கேட்கிறாய்...

உன்னை எனக்கு
நினைவிருக்கா என்று...

எனக்கு உன்
நினைவுகள் தானடி உயிர்...

இதயத்தில்
இருக்கும் உன்னையும்...

எனக்குள் இருக்கும்
உன் நினைவுகளையும்...

இறக்கி வைக்க முடியாத
சுமைதான் நீ போன பின்பும்...

சிலகாலம் உனக்கு
உலகமாக நான் இருந்தேன்...

உலகத்தை
நீ மறந்துவிட்டாய்...

உலகம்
உன்னை மறக்கவில்லை...

நீ பிரிந்து
சென்ற நாட்களைவிட...

இன்று
நீ கேட்ட வார்த்தை...

என்னை
முழுமையாக
கொன்று விட்டதடி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.