04/10/2021

அது ஒரு கனா காலம்...

 




நீ 
என் கண்ணுக்குள்
இருந்த போது..

இமைகளால்
உன்னை பாது காத்து 
சுகமாக உறங்கினேன்...

அது ஒரு கனா காலம்...

இன்று 
நீ என்னை விட்டு
பிரிந்து சென்றதால்..

என் இமைகள் கூட 
எனக்கு சுமையாக...

உறக்கமின்றி அலைகிறேன்
உன் பாத சுவடுகை தேடி ....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.