24/11/2021

பிறப்பால் மட்டுமே ஒருவன் தமிழன்...

 


போதும் போதும் அடிமைப்பட்டு இருந்தது போதும்...

பிறப்பால் மட்டுமே ஒருவன் தமிழனாக இருக்க முடியும்..

யூத இனத்தை பாருங்கள்   எபிரேயு  என்கின்ற ஈப்று மொழியை தாய் மொழியாக கொண்ட பிறப்பு அடிப்படையாக கொண்டவர்களே யூதர்கள்..

ஏசு யுத இனத்தை சேர்ந்தவராக இருந்தாலும், யூதர்கள் கிருத்துவ சமயத்தை ஏற்பதில்லை..

தங்கள் மூதாதையர் சமயமான யூத சமயத்தையே தேசிய சமயமாக ஏற்கிறார்கள். ஏசுவையும்-கிருத்துவத்தையும் மறுக்கிறார்கள். சிறுமான்மை யூதர்களே கிருத்துவத்தை பின்பற்றுகிறார்கள்..

தங்களின் கடைசி இறை துாதராக மோசஸ் என்னும் மோசேவை மட்டுமே ஏற்கிறார்கள்..

ஈப்று மொழியில் இருக்கும் யூத சமயத்தின் புனித நுாலான தோராவை படிப்பதிலும், சாலமன் ஆலயத்தின் மொட்டை சுவற்றை வழிபடுவதிலும் பெருமிதம் கொள்கிறார்கள். ஏசுவால் படைக்கப்பட்ட விவிலியத்தை யூதர்கள் ஏற்பதில்லை..

1948-க்கு முன்பு நாடற்ற யூதர்கள் உலகெங்கும் படுகொலை செய்யப்பட்டதும் அவர்களிடமிருந்த செல்வங்களும் பறிக்கப்பட்டது.

யூதர்கள் சுயநலவாதிகள் என்பதில் இரண்டு கருத்துகள் இல்லை. ஆனால், மொழி, இனம், மண், சமயம் போன்றவற்றின் விடுதலைக்கான முயற்சியில் யூததர்களை மிஞ்ச உலகில் யாரும் இல்லை..

ஒருவர் யூத சமயத்திற்கு மாற வேண்டுமானால், பல தேர்ச்சிகளை பெற்றாக வேண்டும்..

ரபிக்கல் என்னும் யூத குருமார்கள் சாதாரணமாக பிர சமயத்தார் யூத சமயத்திற்கு மாறுவதை ஏற்க்க மாட்டார்கள்..

யூத சமயத்தில் இணைந்து விட்டால் மட்டுமே, ஈப்று மொழியை பேசிவிட்டால் மட்டுமே கானா தேசமாக இருந்த இன்றை இசுரேலில் வாழ்ந்துவிட்டால் மட்டுமே ஒருவர் யூதனாக முடியாது...

யூதனாக வேண்டுமென்றால் பிறப்பு அடிப்படையில மட்டுமே யூதனாக முடியும்..

அப்படித்தான் தமிழர்களும் பிறப்பு அடிப்படையில் மட்டுமே தமிழராக முடியும்.

யூதர்கள் தங்களது தேசிய இன வரையரையாக ஒரு தொடர்ச்சியான  தொண்மையான நிலப்பகுதி ஒரு மொழி, ஒரு பொருளியல் வாழ்க்கை என்பதுடன் மிக அடிப்படையாக சமயத்தையும் வரையாரையாகக் கொண்டு யூத தேசமான இசுரேல் தேசத்தை படைத்திருக்கிறார்கள்.

அது போல் தமிழர்கள் நாமும் பிராமணியத்தை மறுக்கும், சமக்கிருதத்தை மறுக்கும் , இந்து துவாவை மறுக்கும் தமிழ் பக்தி இலக்கியங்களையே கருவரையில் பாடப்படும் தமிழர் சமயமாக பாவானார் , மறைமலை அடிகளார், கா.சு. பிள்ளை சொன்னது போல் தமிழர் சமயத்தை அடிப்படையாக கொள்ள வேண்டும்.

அப்படி பிறப்பு அடிப்படையிலேயே தமிழின வரையரை அமையப்பட வேண்டும்..

தவறினால் ரசினி போன்றவர்கள் தான் 42 ஆண்டுகள் தமிழ் நாட்டில் இருக்கிறேன் ஆகையால் நான் பச்சைத் தமிழன் என்று தமிழினத்திற்கும், தமிழ் மண்ணிற்கும் தலைமை தாங்கி தமிழினத்தை அடிமைப்படுத்தும் சூழல் உருவாகும்.

போதும் போதும்..

மதுரை நாயக்கரிடம், தஞ்சை மராட்டியரிடம், ஆர்காடு நவாப்புகளிடம்,  ஆங்கிலேயரிடம், நீதிக்கட்சி - திராவிடக் கட்சிகளிடம் - இந்தியத்திடம் அடிமைப்பட்டு இருந்தது போதும்..

பிறப்பு அடிப்படையிலேயே தமிழினம் வரையரை செய்யப்பட வேண்டும்

அது பாசிசம் என்றால், பாசிசமாகவே இருந்துவிட்டு போகட்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.