01/01/2022

திராவிடம் என்றால் என்ன?

 


திராவிடம் என்னும் பெயர் எதனால் வந்தது ?

ஏன் வந்தது, யாரால் வைக்கப்பட்டது?

திராவிடர் என்றால் யார்?

திராவிடத்துக்கும் தமிழுக்குமான, தமிழருக்குமான தொடர்பு என்ன ?

ஏன் திராவிட இனம் என்று தமிழினத்தை கூறவேண்டும்?

பதில் கூற முடியாது இணைப்பை துண்டித்து இல்லாத திராவிடம் வளர்ப்பவர்கள் தமிழர்களாக ஒரு போதும் இருக்க வாய்ப்பில்லை.

நான் என்னை தமிழன் என்கிறேன் இல்லை இல்லை நீ திராவிடன் என்கிறது ஒரு கூட்டம்.

அனைத்தும் தமிழில் இருக்கும் போது நம்மை ஆளும் கட்சி பெயர்கள் தமிழிலும், ஆள்பவர்கள் தமிழர்களும் இல்லையே ஏன் ?

திராவிடம் திராவிட கட்சிகள், திராவிட இயக்கங்கள் தமிழினத்துக்கு செய்த உச்சபச்ச நன்மைகள் எவை?

ஆயிரம் ஆண்டுகளாக ஆரியம் என்னும் மாயைக்குள் வழுந்து குழம்பி அழிந்து இருந்தோம், பின் திராவிடம் என்னும் மாயைக்குள் விழுந்து அழிந்து கொண்டிருக்கிறோம்..

இன்று நாம் ஆரியரும் அல்ல, திராவிட வந்தேறிகளும் அல்ல நாம் அனைவரும்  தமிழர் என்னும் தெளிவு ஏற்பட்டிருக்கிறது.

நாம் திராவிடர் அல்ல, நாம் அனைவரும் தமிழர் என்னும் போது வந்தேறிகளிக்கு நடுக்கம் தொற்றி விட்டது, அதனால் குழம்பி போய் உள்ளார்கள், அந்த மாயைக்குள் இருக்கும் தமிழர்கள் நீங்களும் குழம்பி போய் இருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது, இருந்தால் தெளிவு பெறுங்கள்.

ஆயிரம் ஆண்டுக்கும் முன் தெலுங்கர், மலையாளிகள், கன்னடர் தமிழ் பேசியிருந்தால், இன்று அவர்கள் தமிழர்கள் அல்ல தெலுங்கர், மலையாளிகள், கன்னடர். வர்களுடன் ஏதாவது உறவுநிலை தொடர்பிருப்பின் அதில் தவறேதும் இல்லை. ஆனால் அவர்கள் தமிழர்கள் ஆகிவிட முடியாது.

நாம் அனைவரும் தமிழர் ஏன்னும் நிலை தெளிவில்லாத நிலை எனில், இல்லாத திராவிடத்தை விட.நாங்கள்  அனைவரும்  தமிழர் என்னும் தெளிவில்லாத நிலையில் இருக்கவே நான் விரும்புகிறேன்.

உங்களிற்கு திராவிடத்தில் புரிதல் இருப்பின் மேல் உள்ள கேள்விகளிற்கு விடை அளித்து புரிய வைக்கவும்.

அப்படி நாம் அனைவரும் தமிழர் அல்ல நாம் திராவிடர் தான் என்று புரிய வைத்தால் நாங்கள் அனைவரும் தமிழர் என்று கூவாமல் , உங்களுடன் நாங்களும் இணைந்து திராவிடர் என்றே கூவுகிறோம்.

பதில் கூற முடியாது இணைப்பை துண்டித்து இல்லாத திராவிடம் வளர்ப்பவர்கள் தமிழர்களாக ஒரு போதும் இருக்க முடியாது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.