14/01/2022

திருட்டு திராவிடம்...

 


ஆங்கிலேயரின் கொற்றம் 1947ல் இத் துணைக் கண்டத்திலிருந்து அகன்ற போது, பிராமண மேலாதிக்கம் கோலோச்சியது..

ஆங்கிலேயருக்கு எப்படி இத் துணைக் கண்டத்தில் மண்ணுரிமை இல்லை என்பதே நெருடலற்ற உண்மை.

கன்னடருக்கும், துளுவருக்கும், தெலுங்கருக்கும், கசுமீரியருக்கும், பஞ்சாபியருக்கும், அசாமியருக்கும், மலையாளிகளுக்கும், தமிழர்களுக்கும் இதுபோன்ற இன்னபிற இனங்களுக்கும் இத்துனைக்கண்டத்தில் மண் உண்டு. மன்னுரிமையுண்டு.

பிராமணருக்கு ஏது மண்? தேசம்? நாடு? மண்ணுரிமை?

எனவே, இந்திய ஒன்றியம் உருவாக்கப்பட்டது...

தேசிய மாயை திணிக்கப்பட்டது..

ஒற்றைத் தேசியம் என்கிற கோட்பாடு சட்டப் பாதுகாப்புப் பெற்றது. ஆக, இந்த இந்தியச் சேற்றுக்குள் பல்வேறு தேசிய இனங்கள் சிக்கிச் சின்னா பின்னமாயின.

ஆனால், எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?

மராத்தியரும், பீகாரியரும், காசுமீரியரும், பஞ்சாபியரும், அசாமியரும் கிளர்ந்தெழுந்து போராடுகின்றனர்.

மலையாளிகளும் தெலுங்கரும் கன்னடரும் கமுக்கமான வேறுபல வழிகளில் தங்களது ஆளுமையைத் திணிக்கின்றனர்..

முட்டாள் தமிழா நீ மட்டும் தான் திராவிடப் போர்வையில் அடிமையாய் வாழ்கிறாய்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.