29/05/2022

பெண்ணே...

 


உன்னை மலர் என்றேன்

நீ வாடிவிடுவாய் என தெரியாமல்...


நிலவு என்றேன் 

நீ தேய்ந்துவிடுவாய்

என தெரியாமல்....


சூரியன் என்றேன் 

நீ சுட்டுவிடுவாய்

என தெரியாமல்...


என் உயிர் என்றேன் 

உன் திருமண 

பரிசாய் கேட்பாய் 

என தெரியாமல்....


🚶🚶🚶

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.