02/08/2022

ஒரு அதிகாலைப்பொழுது.. கணவன் மனைவியை எழுப்பி கேட்டான்...

 


"டியர்... Walking போறேன்...

நீயும் வர்றியா?"


கணவனை வித்தியாசமாக பார்த்த அந்த மனைவி,


"ஓ... அப்படின்னா நான் குண்டா இருக்கேன்!

உடம்பை குறைன்னு சொல்றீங்க.. அப்படித்தானே?"


கணவன்:- "அதுக்கில்லைம்மா, Walking போறது ஹெல்த்துக்கு நல்லது!"


மனைவி:- "அப்போ என்னை நோயாளின்னு சொல்றீங்களா?"


கணவன்:- "இல்லை இல்லை!

நீ வரவேணாம். விடு"


மனைவி:- "அப்ப என்னை சோம்பேறின்னு நினைக்கிறீங்க!"


கணவன்:- "ஐயோ இல்லை..

ஏன் எல்லாத்தையும் தப்பாவே புரிஞ்சுக்கிற?"


மனைவி:- "இவ்வளவு நாளா புரிஞ்சுக்காம தான் இருந்தேனா?"


கணவன்:- "மறுபடி பாரு..

நான் அப்படி சொல்லலை"


மனைவி: - அப்புடித்தான் சொன்னீங்க!

அப்ப என்ன நான் பொய் சொல்றேனா?"


கணவன்:- "தயவு செஞ்சு விடு..

காலங்காத்தால ஏன் சண்டை?"


மனைவி: "ஆமாங்க...

நான் சண்டைக்காரிதான்"


கணவன்:- "Ok!

நானும் போகலை. போதுமா?"


மனைவி:- "உங்களுக்கு போக அலுப்பு,

அதுக்கு என்னை குத்தம் சொல்றீங்க”


கணவன்:- "சரி, நீ தூங்கு!

நான் தனியா போய்க்கிறேன்”

மனைவி:- "அதானே... உங்களுக்கு எங்க போனாலும் தனியா போய் enjoy பண்ணனும்!


அதுக்குத்தானே இவ்வளவும் பேசுனீங்க?"🙄🙄🙄🙄


சிங்களாய் இருப்போம்.. 

நிம்மதியாய் வாழ்வோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.