09/09/2022

ராணி எலிசபெத் மரணம்...


சுதந்திரம் என்பது கொடுக்கப்படுவதோ அல்லது பிச்சையை போல் வாங்கப்படுவதோ அல்ல, அடித்து பறிக்கப்படுவது...


அப்படி இருக்கையில் எல்லா நாட்டு மக்களையும் சுதந்திரம் கொடுத்தாச்சு என்று முட்டாள் ஆக்கி பொம்மை ஆட்சியாளர்களை வைத்து இன்றுவரை ஆட்சி செய்து கொண்டிருந்தாலும்....


75 வருடங்கள் கடந்தும், இந்த டுபாக்கூர் சுதந்திர கதையை சிறுவர் தொடங்கி phd படித்தவர்கள் வரை நம்பும் அளவிற்கு, குப்பைக் கல்வியை அனைத்து நாடுகளிலும் நிறுவியிருந்தாலும்....


இவற்றையெல்லாம் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினாலும், 


அப்படி அம்பலப்படுத்துபவனை, மக்கள் கிறுக்கனை பார்ப்பதை போல்  பார்க்குமளவிற்கு அவர்களை மூளைச்சலவை செய்திருந்தாலும்...


இப்படி உலகம் முழுக்க சூறையாடிக் கொண்டிருக்கும் அரச குடும்பத்தை, மக்கள் திரண்டு அடித்து நொறுக்குவதற்கு பதிலாக, 


கிழவியின் இறப்பிற்கு மக்களை கண்ணீர் அஞ்சலி செலுத்த வைக்கும் அளவிற்கு சூழ்ச்சிகார குடும்பமாக இருந்தாலும்...


என்னாதான் ஆண்ட பரம்பரை அப்பாடக்கராக இருந்தாலும்....


உலகின் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தாலும்...


நீயும் நானும் சாவுலேர்ந்து தப்பிக்க முடியாது இராசா...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.