21/03/2023

என்னமோ போங்கடா...

 


ரோட்ல நடந்து வந்துட்டிருந்தேன், எதிர்ல வந்த பொண்ணு குங்கும டப்பாவ கீழ தவற விட்டுடுச்சு போல...

ரெண்டு கையிலயும் பை வச்சுட்டிருந்ததால அத எடுத்து தரச் சொல்லி என்கிட்ட கேட்டுச்சு...

மன்னிச்சுக்கம்மா. இந்த கை என் மனைவிய தவிர யாருக்கும் குங்குமம் எடுத்து கொடுக்காதுன்னு சொல்லிட்டேன். 

அந்த பொண்ணு உடனே இப்படி ஒரு கற்புக்கரசனான்னு என் கால்ல விழ வந்தது. 

இதுக்கும் மன்னிச்சுக்கம்மா வேறொரு பொண்ணோட கை என்னோட கால தொடறத விரும்பலன்னு சொன்னேன். 

அந்த பொண்ணு இப்படி ஒரு மனுஷன வாழ்க்கையில எப்படி மிஸ் பண்ணோம்னு நடுரோட்டிலயே உக்காந்து வாயிலயும் வயித்துலயும் அடிச்சுகிட்டு அழ ஆரம்பிச்சுடுச்சு...

உங்கள கட்டிக்கிட்ட அந்த அதிர்ஷ்டகார பொண்ண பார்க்கலாமானு கேட்டுச்சு...

மன்னிச்சுக்கம்மா.. எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல.. அந்த அதிர்ஷ்டகார பொண்ணுக்காக தான் காத்திட்டிருக்கேன் சொல்லிட்டு...

ரொம்ப சங்கடமா அந்த இடத்தில் இருந்து கடந்து வந்தேன் நண்பர்களே...😒😔

அந்த அதிர்ஷ்டகார பொண்ணு யாரோ.. எங்க இருக்காளோ... 🚶

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.