12/10/2023

ஒரிசா பாலு மரணம் தமிழினத்திற்கு பெரிய இழப்பு...

 


தமிழுக்காக உழைத்தவர் சிறு வாடகை வீட்டில் வாசலில் துயில் கொள்கிறார். சாலை கூடப் போடாத அரசு. மக்களே கற்களை நிரப்பி மழைக்கு சாலையாக வைத்திருக்கிறார்கள். அவர் கடந்து வந்த பாதை மட்டுமல்ல கடைசியாகச் செல்லும் பாதையும் அப்படித்தான் இருக்கிறது.

ஒரு சினிமாக்காரனுக்கு கூடும் கூட்டம் கூடத் தமிழுக்காக உண்மையாக உழைத்தவரின் கடைசி ஊர்வலத்திற்கு கூடாமல் இருப்பது சாபக்கேடு.

புதைக்கத் தமிழர் பூமியில் இடமில்லை என்று மின்தகனம் நோக்கிச் செல்கிறார்

முதல் காட்சிக்கு விழுந்து அடித்து ஓடும் கூட்டமே தமிழுக்காக உழைப்பவர்களை நீங்கள் முதல் காட்சியாகப் பார்க்க முடியாது ஆனால் கடைசி காட்சியாவது பார்க்கலாம்.

ஒரிசா பாலு அவர்கள்....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.