02/10/2023

நேற்று இரவு நான் படுத்து கொண்டு போனில் படம் பார்த்து கொண்டிருந்தேன்...

 


அப்போது என் மீது ஏதோ ஊர்ந்து போவதை உணர்ந்தேன்... ஆனால் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை...

சிறிது நேரத்தில் என் பக்கத்தில் இருந்த அனைவரும் தள்ளி சென்று பாம்பு பாம்பு என்று கற்ற தொடங்கினர்....

நான் அசையாமல் காதில் எட்செட் போட்டு படம் பார்த்து கொண்டிருந்தேன்...

சிறிது நேரம் என் மேல் படம் எடுத்து விட்டு அப்படியே படுத்து தூங்கிட்டு இருந்தது...

பிறகு நான் அனைவரையும் பார்க்க அனைவரும் சைகையில் கையசைக்க நான் காதில் இருந்து எட்செட் எடுத்தவுடன் தான் தெரிந்தது என் மீது பாம்பு தூங்கி கொண்டிருக்கிறது என்று...

நான் அனைவரையும் அமைதியாக இருங்க அது ஓய்வு எடுத்துட்டு அதுவே போகும் என்று சொல்லி விட்டு நான் அசையாமல் மீண்டும் படத்தை பார்க்க தொடங்கி விட்டேன்...

ஒரு 10 நிமிடம் கழித்து அந்த பாம்பு என் தோள் பட்டை கழுத்து பக்கத்தில் நின்று சிறிது நேரம் அனைவரையும் வேடிக்கை பார்த்துட்டு பொறுமையாக கீழே இறங்கி சென்று   திரும்பி என் முகத்தை பார்த்து விட்டு சென்றது...

அந்த பாம்பு 2 அடி இருக்கும்ம்.. அதை பார்த்தவுடன் புரிந்து கொண்டேன் அதன் தாயும் இங்கு எங்கோ தான் இருக்கிறது என்று...

அது சென்ற பிறகு அனைவரும் வந்து நலம் விசாரித்து விட்டு அந்த பாம்பை  பின் தொடர்ந்தனர்...

நான் உடனே அதை யாரும் பின் தொடர்ந்து தொந்தரவு செய்யாதீர்கள்... அது யாரையும் எதுவும் செய்யாமல் அமையாக வந்து செல்கிறது விடுங்கள் என்று சொல்லி அங்கிருந்தவர்களை துறத்தி விட்டேன்...

பிறகு அங்கு நான் மட்டுமே படுத்து சிறிது நேரம் படம் பார்த்து விட்டு தூங்கினேன்...

இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால்...

அனைத்து ஜீவராசிகளிடமும் அன்போடு பழங்குங்கள் அவைகளுக்கு உணரும் திறன் உள்ளது... குடும்பமும் உள்ளது...

அங்கு ஒருவர் கேட்டார்... 

ஏன்ப்பா நீ அமைதியா அப்படியே இருக்க கொத்தி இருந்தா போய் சேர்ந்திருப்பனு...

அதற்க்கு நான் சொன்ன பதில்... என் விதி அப்படி தான் முடியும் என்று இருந்தால் முடியட்டும் மகிழ்ச்சியே... 

ஏனெனில் மரணம் என்பது துன்பம் அல்ல... மகிழ்ச்சியான விடுதலை...

ஆம் இந்த பாவப்பட்ட உலகில் இந்த உடலோடு வாழ்வது என்பது பாவத்தின் கர்மவினை தான்...  

அந்த மனிதர் என்னை பார்த்துட்டே போய் விட்டார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.