18/12/2023

பெரியாரும் பன்றியும்...

 


முதன்முதலில் பெரியாரியர்கள் பன்றியை ஒரு இழிவான விலங்காக உருவகம் செய்து.. பூணூல் அணிவிக்கும் போராட்டத்தை அறிவித்தார்கள்..

அதை வழிமொழிந்து இந்துத்துவ வன்னெறிக்கும்பல் இப்போது பெரியாரின் தோற்றரவை பன்றி வடிவத்தில் அவரின் குறியீடுகளான கைத்தடி தாடி போன்றவற்றை கொண்டு கேலிச்சித்திரம் உருவாக்கி இருக்கிறார்கள்.


நாம் உலகில் எந்த மாந்தரையோ அல்லது விலங்கினங்களையோ உருவக்கேலியோ அல்லது உண்ணும் உணவைக்கொண்டு மாந்தர்,அல்லது விலங்குகளை இழிவானதாக கருதுவதில்லை.

பெரியாரியர்கள் பன்றியை உண்ணும் உணவை கொண்டு இழிவுபடுத்துவதும்...

இந்துத்துவ வன்னெறியர் மாட்டிறைச்சி உண்பதை கொண்டு இழிவு படுத்துவதையும் ஒருசேரக் கண்டிக்கிறோம்

திராவிட இயக்க தோற்றப்போலி கருத்தியல்களை நாம் அறிவுத்தளத்தில் எதிர்கொண்டே வீழ்த்துகிறோம்..

அதில் யாரையும் எப்போதும் உருவக்கேலி செய்வதையும் விலங்குகளை இழிவானதாக கருதும் மேற் கட்டுமாண பிரமாண கருத்தியலையும் ஒருசேரக் கண்டிப்போம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.