02/04/2019

தங்கள் சொந்த மண்ணிலேயே மக்களின் போக்குவரத்துக்குத் தடை..


இப்படித் தடை போட்டு சுங்கச்சாவடிகள் மூலம் கட்டணம் வசூலிப்பது மனித உரிமை மறுப்பு மற்றும் பறிப்பே..

வழிப்பறிகொள்ளைக்கூடங்களாய்த் திகழும் இந்தச் சுங்கச்சாவடிகள் வருடாந்தோறும் கட்டணத்தையும் உயர்த்திக்கொள்வதற்கு கண்டனம் தெரிவிகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

தமிழகத்தில் மொத்தம் 42 சுங்கச்சாவடிகள் இருந்தன. இப்போது 45 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிகிறது. அதில் 22 சுங்கச்சாவடிகளில் இன்று ஏப்ரல் 1ந் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. ஆண்டுதோறும் சுழற்சிமுறையில் செப்டம்பர் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கட்டணம் உயர்த்தப்படும். அந்தவகையில் இன்று முதல் கட்டண உயர்ந்திருக்கிறது.
இந்தக் கட்டண உயர்வு இவ்வளவுதான் என்று கூறப்படாமல், 10 விழுக்காடு வரை  இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு கட்டண உயர்வு 10 விழுக்காடு முதல் 20 விழுக்காடு வரை என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் வசூலுக்கப்படும் கட்டணத்திற்கும் அதற்கும் சம்பந்தமில்லை. 40 விழுக்காடு வரைகூட சில சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்பட்டது. இப்போது திட்டவட்டமாக அறிவிக்கப்படாமல் 10 விழுக்காடு வரை இருக்கும் என பொத்தாம்பொதுவாக அறிவிக்கப்பட்டிருப்பதால் வசூல் கடுமையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இப்படி வரைமுறையற்ற கட்டண வசூலாக இருப்பதால்தான் சுங்கச்சாவடிகளை வழிப்பறி கொள்ளைக்கூடங்கள் என்கிறோம். நாம் சொல்வதற்கிணங்கவே அவை நடந்துகொள்கின்றன. அப்பாவி பொதுமக்களின் வண்டியை மறித்து குடும்பத்தோடு வருபவர்களையும் தாக்குவது, கட்டணம் செலுத்திய பிறகும் கஞ்சா, அபின், டாஸ்மாக் சரக்கு போன்றவற்றுக்காக மிரட்டிப் பணம் பறிப்பது என சுங்கச்சாவடிகளில் நடக்கும் அக்கிரமங்களுக்கு அளவே இல்லை. புகார் கொடுத்தாலும் உரிய நடவடிக்கை இல்லை. காவல்துறை வாகனங்கள், தனியார் செக்யூரிட்டி (குண்டர்கள்) வாகனங்கள் உள்ளிட்டவை எந்நேரமும் சுங்கச்சாவடிகளுக்குப் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன. 99 விழுக்காடு வட இந்தியர்களையே ஊழியர்களாக வைத்துக்கொண்டு, அவர்களோடு உள்ளூர் ரவுடிகள், தாதாக்கள், கொலைக்குற்றவாளிகள் போன்றோரையும் இணைத்துக்கொண்டு இந்த அடாவடி அக்கிரமங்களைச் செய்துகொண்டிருக்கின்றன இந்தச் சுங்கச்சாவடிகள்.

தனியார் கையில் உள்ள 15 சுங்கச்சாவடிகள், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் உள்ள 7 சுங்கச்சாவடிகள் என 22 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. தனியார் கையில் என்பது கார்ப்பொரேட்டுகள் கையில் என்பதே. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் உள்ள 7 சுங்கச்சாவடிகள் என்பது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஏனெனில் அவையும் கார்ப்பொரேட்டுகளின் சுங்கச்சாவடிகள் போல்தான் செயல்படுகின்றன. பரனூர், வானகரம், சூரப்பட்டு, கிருஷ்ணகிரி, கப்பலூர், நாங்குநேரி, எட்டூர் வட்டம், பாலைபுத்தூர், பூதக்குடி, சிட்டம்பட்டி, பள்ளிகொண்டா, வாணியம்பாடி, திருப்பெரும்புதூர், வாலாஜா, வாகைகுளம், ஆத்தூர், பட்டறைப்பெரும்புதூர், எஸ்.வி.புரம், லட்சுமணப்பட்டி, லெம்பலாக்குடி, தனியூர் ஆகியவைதான் கட்டணம் உயர்த்தப்பட்ட இந்தச் சுங்கச்சாவடிகள். இவற்றில் சாலைகளின் தூரம், தரம், வசதி ஆகியவற்றிற்கேற்ப கட்டண விழுக்காடு மாறிமாறி இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

சாலைகளைப் பராமரிக்கவே ஆண்டுதோறும் 10 விழுக்காடு வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது என்கிறார்கள். ஆனால் அப்படி சாலைகள் பராமரிக்கப்படுவதில்லை. உதாரணத்திற்கு, பள்ளிகொண்டாவிலும் வாணியம்பாடியிலும் 4 வழிச்சாலை 6 வழிச்சாலையாக மாற்றப்படும் என்று 2009இல் அறிவித்து, அதற்கேற்ப அதிக கட்டணம் வசூலித்துவருகிறார்களே தவிர, இன்றுவரை அந்த சாலைப் பணி கூட தொடங்கப்படவில்லை.
சுங்கச்சாவடிகளில் ஆம்புலன்ஸ் எந்நேரமும் தயாராக இருக்க வேண்டும். ஆனால் அது நம் கண்ணில் பட்டதேயில்லை. குடிநீர், கழிப்பறை மற்றும் போதிய அளவில் சர்வீஸ் சாலைகள், மின்விளக்குகளும் இருக்க வேண்டும். ஆனால் அப்படி எங்கும் கானப்படவில்லை.

சுங்கக் கட்டண உயர்வால், வாகனங்கள் ஏற்றிச்செல்லும் சரக்குகளின் விலை உயரும்; இந்த விலைவாசி உயர்வு வரி என்ற பெயரில் மக்கள் தலையில் இடியாக இறங்கும்! நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரமும் அதலபாதாளத்திற்குச் செல்லும். இதனால்தான் சுங்கச்சாவடிகளை அகற்றியாக வேண்டும் என்பதை சிறப்புக் கொள்கையாகவே கொண்டு போராடிவருகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி. அதனால் பொய்வழக்ககுகளையும் எதிர்கொண்டுவருகிறோம்.
சென்னை உயர் நீதிமன்றம் பல முறை சுங்கச்சாவடிகளின் நடைமுறைகளைக் கண்டித்திருக்கிறது; திருத்திக்கொள்ள உத்தரவிட்டிருக்கிறது. மேலும் 30 செகண்டுகளுக்கு மேல் வாகனங்கள் வரிசையில் நிற்கக்கூடாதென்றும் சொல்லியிருக்கிறது. ஆனால், பல சாவடிகளில் மணிக்கணக்காக, பல கி.மீட்டர்கள் தொலைவுக்கு வாகனங்கள் காத்துக்கிடக்கின்றன. இதில் நீதியரசர்கள், ஆம்புலன்ஸ், காவல் கண்கணிப்பாளர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர்கள்,
பத்திரிகையாளர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் போன்ற விஐபிக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்காமல், அவர்களுக்கென்று சுங்கச்சாவடிகளில் தனி வழி ஏற்படுத்தப்பட வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஆனால் அப்படி ஒரு தனி வழி இதுவரை எந்தச் சுங்கச்சாவடியிலும் அமைக்கப்படவில்லை.

அப்படியென்றால் நீதிமன்றத் தீர்ப்பையே மதிக்காமல் லஞ்சம் ஊழலையே மூலதனமாக வைத்து சுங்கச்சாவடிகளை நடத்தும் கார்ப்பொரேட்டுகள் மத்திய, மாநில ஆட்சியாளர்களின் துணையில் தனி அக்கிரம சாம்ராஜ்யமே நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதானே என்றுதானே அர்த்தம்?

இதைத் தன்னந்தனியாக நின்று தட்டிக்கேட்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி. ஆனால் எங்கள் மேல் தேச துரோகம் உள்ளிட்ட பொய் வழக்குகளைப் போடுகிறார்கள் மத்திய, மாநில ஆட்சியாளர்கள்.

இந்தக் கொடூரத்தையும் பயங்கரவாதத்தையும் எதிர்கொண்டு தான் சுங்கச்சாவடிகளை அகற்றியே தீர வேண்டுமென்று போராடிக் கொண்டிருக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

போராட்டத்தின்போதெல்லாம் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை அணுகி எங்கள் கோரிக்கையை சாத்வீக முறையிலேயே முறையீடாக அளிக்கிறோம். ஆனால் மத்திய, மாநில அரசுகள் அதனைக் கண்டு கொள்ளவில்லை. ஆனால் நாங்கள் சோஎர்ந்துவிடமாட்டோம். மக்களுக்காக, அம்மக்களின் பேராதரவுடணேயே இதனைச் செய்து முடிப்போம்.

தங்கள் சொந்த மண்ணிலேயே மக்களின் போக்குவரத்துக்குத் தடை என்பதுதான் இந்தச் சுங்கச்சாவடிகள்!
இவற்றில் கட்டணம் வசூலிப்பது மனித உரிமை மறுப்பு மற்றும் பறிப்பே!
வழிப்பறிகொள்ளை செய்வது மட்டுமல்லாமல் ஆண்டுதோறும் கட்டணத்தையும் இவை உயர்த்துவது கண்டனத்துக்குரியது...

தலைமை தேர்தல் அதிகாரி அதிரடி முடிவு.. வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து ஆகுமா.?


https://youtu.be/mDzqJL0saVg

Subscribe The Channel For More News...

வான்கோழி வளர்ப்பு முறைகள்...


ஆடு, கோழி மற்றும் மீன் இறைச்சிகளுக்கு அடுத்தப்படியாக அசைவப் பிரியர்களின் உணவாக இருப்பது வான்கோழி ஆகும். இதன் சுவையும் அனைவருக்கும் பிடிக்கும். தற்போது கோழி வளர்ப்பவர்களின் அனைவரது கவனமும் வான்கோழி வளர்ப்பில் அதிகரித்துக் கொண்டு வருகிறது. தற்போது வான்கோழி வளர்ப்பு முறையை பற்றி பார்போம்.

இடம் தேர்வு செய்யும் முறை :

வான்கோழி வளர்க்க அதிக இடவசதியோ, முதலீடோ தேவையில்லை. வான்கோழி வளர்க்க விரும்புபவர்கள் 200 முதல் 250 சதுர அடி இடத்தில் 100 வான்கோழி குஞ்சுகளை வளர்க்கலாம்.

வான்கோழி இனங்கள் :

அகன்ற மார்புடைய வெண்கல இனம், அகன்ற மார்புடைய வெள்ளை இனம்(கரி-விரட்), பெல்ட்ஸ்வில்லி சிறிய வெள்ளை இனம், நந்தனம் வான்கோழி ஆகிய வான்கோழி இனங்கள் ஆகும். இதில் நந்தனம் வான்கோழி இனமானது நமது பகுதிகளுக்கு வளர்க்க ஏற்றதாகும்.

வான்கோழி கொட்டகை அமைக்கும் முறை :

வான்கோழி வளர்ப்புக்கு புறக்கடையில் அதிக செலவு செய்து கொட்டகை அமைக்கத் தேவையில்லை. அதற்கு பதிலாக பழைய டைமண்ட் லிங்க் வேலிகளை வாங்கி தடுப்பு அமைத்துக்கொள்ளலாம். வான்கோழி வளர்க்கும் போது கொட்டகைக்குள் மழை மற்றும் வெயில் பாதிக்காத அளவுக்கு மூங்கில், தென்னங்கீற்று ஆகியவற்றை கொண்டு கொட்டகை அமைக்க வேண்டும்.

கொட்டகையின் தரை பகுதியில் நான்கு அங்குல உயரத்துக்கு கடலைப்பொட்டு பரப்பிவிட வேண்டும். கடலைப்பொட்டுக்கு பதிலாக தேங்காய் நார்க்கழிவுகள், நெல் உமி ஆகியவற்றையும் பயன்படுத்தலாம். அதன் பிறகு ஒன்றரை மாத அளவிலான கோழிக்குஞ்சுகளை வாங்கி விடலாம்.

கொட்டகையின் சுவர்ப்பகுதியில் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை சுண்ணாம்புத் தூளை தூவி விட வேண்டும். அதே போல் 15 நாட்களுக்கு ஒரு முறை கடலைப்பொட்டை மாற்ற வேண்டும். பகல் வேலையில் கோழிகளை திறந்த வெளியில் மேய்ச்சலுக்கு செல்வதற்கு திறந்து விட வேண்டும்.

தீவனம் அளிக்கும் முறை :

வான்கோழி வளர்ப்புக்கு கடைகளில் விற்கும் தீவனங்களை வாங்கினால் கட்டுபடியாகாது. இதற்கு பதிலாக பச்சை புற்களை அதிக அளவில் கொடுக்க வேண்டும். நம் வயல்களில் உள்ள புற்கள், கீரைகளையும் தீவனமாக கொடுக்கலாம்.

மேலும் 60 சதவீதம் புற்கள், 20 சதவீதம் தவிடு, 20 சதவீதம் முட்டைக்கோழி தீவனங்களை சரியான விகிதத்தில் கலந்து கொடுத்தால் தீவனச் செலவை அதிக அளவில் குறைக்க முடியும்.

நோய் மேலாண்மை :

வான்கோழிகளை அம்மை மற்றும் சளி போன்ற நோய்கள் தாக்கும். இதற்கு சீரகம், மிளகு, வெந்தயம், மஞ்சள் தூள், கசகசா, கடுகு போன்றவற்றை தலா 2 தேக்கரண்டி, பூண்டு 5, வெங்காயம் 4 ஆகியவற்றை சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து வாரம் ஒரு முறை தண்ணீரில் கலந்து கொடுத்து வந்தால் நோய்கள் தாக்காது.

அதன் பிறகு மாதம் ஒரு முறை 20 லிட்டர் தண்ணீரில் 200 கிராம் மஞ்சள் தூளைக் கலந்து, வான்கோழியின் தலையை தவிர்த்து, உடல் முழுவதும் முக்கி எடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கோழிகளுக்கு தோல் நோய் தாக்காது.

வான்கோழியின் மூலம் லாபம் :

வான்கோழிகளை குஞ்சுகளாக வாங்கி வளர்க்கும் போது அடுத்த ஆறு மாதத்தில் முட்டை வைக்க தொடங்கும். 100 கோழிகளுக்கு 20 சேவல்கள் வேண்டும். இதன் மூலம் தினமும் 25 முட்டைகள் வரை கிடைக்கும்.

வான்கோழிகள் 36 மணி நேரத்திற்கு ஒரு முறைதான் முட்டை வைக்கும். இதன் மூலம் தினமும் வருவாயாக 500 ரூபாய் வரை லாபம் பார்க்கலாம். ஒரு வான்கோழியானது ஒன்றரை ஆண்டு வரை முட்டை இடும். வான்கோழிகளை தினமும் மற்றும் பண்டிகை காலங்களில் விற்பனை செய்தால் அதிகளவில் லாபம் பெற முடியும்...

பாரத் சேனா எனும் அமைப்பை சார்ந்தவனால் அந்த துடியலூர் சிறுமி தன்யாஸ்ரீ கற்பழிக்கப்பட்டு இருக்கிறாள்....


இந்த பக்தாள் கூட்டம் கொலை செய்யவும் கற்பழிக்கவுமே கற்றுக் கொடுக்கப்பட்டு களத்தில் இறக்கி விடப்பட்டவர்கள்...

பிடில் / வயலின்...


இது மேல்நாட்டு இசைக்கருவி. இது தமிழ்நாட்டு மிடற்றிசைவாணருக்கு உதவி இசைக்கருவியாகக் கொண்டுவரப் பெற்று நீண்ட காலம் ஆகவில்லை. பாடுவதைப்போல் இசைக்கருவியில் வாசிக்கக் கூடும். எனினும் அது அத்துணை எளிதான காரியமன்று.

கேள்வியின் பயனாய் மிகவும் சாமான்னியமானவர் பாடிவரும் தெருப்பாட்டுகளில் அழகு விளங்குவது போல இக்கருவியில் இசைக்க இயலாது. இது மேல்நாட்டு இசைக்கருவியாயினும் இசை இயக்கம் பெறுவதில் மிகக்கடினமாயினும் ஏனைய இசைக்கருவிகளைவிட இதில் வாய்ப்பாட்டு நன்றாய் அனுசரிக்க கூடுமென்பதை உறுதியாகக் கூறலாம்.

இவ்வாறு செய்வதற்கு முதலில் இக்கருவியைத் தேர்ந்தெடுத்தல் வேண்டும். பிறகு தந்திகள் அதற்குத்தக எடுத்தல் வேண்டும். அதன்பிறகு பயிற்சிமுறைகள் எல்லாம் அனுகூலமாய் இருத்தலும், இதை இசைப்போர் பல மாதிரியான மிடற்றிசையின் ஏற்றத்தாழ்வுகளையும், பற்பல இசையமைப்புகளையும் நன்றாய் அறிந்திருக்க வேண்டும்.

அப்பொழுது தான் மிடற்றிசையிலிருந்து எழும் பாட்டை அனுசரித்து வாசிக்கக்கூடும். மிடற்றிசையைப் பிடில் கருவியில் அனுசரிக்கும் அறிவை அடைந்த ஒருவன், இலக்கண சேர்க்கைப் பெற்ற   மிடற்றிசை இவ்வாறானது என்பதைப் பிறருக்கு விளக்கிவரவும் எடுத்துக்கூறவும் முடியும். அக்காலத்தில் பாடுவோருக்கு யாழ்க்கருவியும், சாரந்தா என்ற கருவியுமே துணைக்கருவியாக இருந்தன.

பிடில் கருவியின் சுருதியின் தந்திகளைச் சுருதி செய்வதில் இரண்டு வகைகளுள்ளன. ஒன்று இந்திய முறையார் செய்வது, மற்றொன்று ஆங்கில முறையாற் செய்வது.

இந்திய முறையாற் சுருதி செய்வதில் இடமிருந்து வலமாக ‘4, 3, 2, 1’ ஆகிய தந்திகளின் முறையே மெலியுதானத்துக் குரல், அதாவது மந்தரஸ்தாயி ஸ, மெலியுத்தானத்து இளி, அதாவது மந்திரஸ்தாயி ப, சமன்தானத்துக் குரல், அதாவது மத்தியஸ்தாயி ஸ, சமந்தானத்துக் குரல், அதாவது மத்தியஸ்தாயி ப என்ற முறையில் சேர்க்கப் பெற்ற ‘ஸ-ப, ஸ-ப’ என்ற ஒலிக்கும், அதாவது மூன்றாவது தந்தியானது நாலாவது தந்தியின் ஐந்தாவது சுரத்தை ஒலிப்பதாயும், இரண்டாவது தந்தி மூன்றாவது தந்தியின் நான்காவது சுரத்தை ஒலிப்பதாயும், முதலாவது தந்தியானது இரண்டாவது தந்தியின் ஐந்தாவது சுரத்தை ஒலிப்பதாயும் இருக்கும்.

ஆங்கில முறையாற் சுருதி கூட்டுவதில் நான்காவது தந்தியின் ஐந்தாவது சுரம் மூன்றாவது தந்தியிலும், மூன்றாவது தந்தியின்  ஐந்தாவது சுரம் இரண்டாவது தந்தியிலும், இரண்டாவது தந்தியின் ஐந்தாவது சுரம் முதல் தந்தியிலும் ஒலிப்பதாய் சுருதியில் சேர்த்துக் கொள்வர். நான்காவது தந்தி பெரும்பாலும் (G) ஜி சுரத்திலேயே அதாவது மெலிவுத்தானத்து ப- என்ற சுர ஒலியே வரப்படுவதாய் வைத்துக் கொள்ளப் பெறுவதால், ‘4-3-2-1’ என்ற தந்திகள் முறையே ‘ப-ரீ-த-கா’ தந்திகள் என்ற பெயர்களில் வழங்கி வருகின்றன...

எல்லாம் போச்சு.. சிக்கியது மூட்டை மூட்டையாக பணம்.. பதறிப்போன திமுக எடுத்த முடிவு...


https://youtu.be/rGKeyEUGNHc

Subscribe The Channel For More News...

பிரபஞ்ச இரகசியம்...


புத்துணர்ச்சி பெற.. கவலைகள் நீங்க...

1.உங்களுக்கு நீங்களே இவ்வாறு கூறிக் கொள்ளுங்கள்..

கவலை என்பது வெறும் மனப்பழக்கம் தான்.

பிரபஞ்சத்தின் உதவியுடன் எந்தப் பழக்கத்தையும் என்னால் மாற்ற முடியும்.

2.கவலையைக் கடைப்பிடிப்பதன் மூலம் நீங்கள் கவலையாளர் ஆகி விடுகிறீர்கள்..

கவலைக்கு நேரெதிரான, வலிமையான, நம்பிக்கை என்னும் பழக்கத்தைக் கடைப் பிடிப்பதன் மூலம் உங்களால் கவலையில் இருந்து விடுபட முடியும்.

3.உங்களால் திரட்டக் கூடிய விசுவாசத்தைக் கடைப்பிடிக்கத் துவங்குங்கள்..

விசுவாசம் என்னும் பழக்கத்தை எவ்வாறு உருவாக்குவது?

தினமும் படுக்கையைவிட்டு எழுவதற்கு முன் முதல் வேலையாக.. நான் நம்புகிறேன் என்று உரக்க மூன்று முறை கூறுங்கள்.

4. இந்தச் சூத்திரத்தைக் கொண்டு பிரார்த்தனை செய்யுங்கள்..

நான் இன்றைய தினத்தையும், என் வாழ்க்கையையும், என் அன்பிற்கு உரியவர்களையும், என் வேலையையும் பிரபஞ்சத்தின் கைகளில் ஒப்படைக்கிறேன்.

பிரபஞ்சத்தின் கைகளில் எந்தத் தீங்கும் இல்லை.

நல்லது மட்டுமே உள்ளது.

எது நிகழ்ந்தாலும் சரி,

அது இயற்கையின் விருப்பம்.

அது நல்லதாகவே இருக்கும்.

5.நேர் மறையாகப் பேசுவதற்குப் பயிற்சி செய்யுங்கள்...

இன்று மிக மோசமான நாளாக இருக்கப் போகிறது என்று கூறாதீர்கள்.

மாறாக இன்று ஓர் அற்புதமான நாளாக அமையப் போகிறது என்று சுய பிரகடனம் செய்யுங்கள்.

என்னால் ஒருபோதும் அதைச் செய்ய முடியாது என்று கூறாதீர்கள்.

மாறாக இயற்கை சக்தியின் உதவியுடன் நான் அதைச் செய்வேன் என்று சுயபிரகடனம் செய்யுங்கள்.

6.கவலை பற்றிய உரையாடலில் ஒருபோதும் கலந்து கொள்ளாதீர்கள்...

அனைத்து உரையாடல்களிலும் நம்பிக்கையைப் புகுத்துங்கள்.

மோசமான விஷயங்களுக்கு மாறாக உற்சாகமூட்டும் விஷயங்களைப் பற்றி பேசுவதன் மூலம் மனச்சோர்வூட்டும் சூழலை விரட்டி விட்டு, அனைவரும் நம்பிக்கை யையும் மகிழ்ச்சியையும் உணர உங்களால் உதவ முடியும்.

7. கவலையாளராக இருப்பதற்கு ஒரு காரணம்.. மனம் பய எண்ணங்களாலும், தோல்வி எண்ணங் களாலும், சோர்வூட்டும் எண்ணங்களாலும் நிரம்பி வழிவது தான்...

அதை முறிப்பதற்கு, நம்பிக்கை, மகிழ்ச்சி, புகழ், பொலிவு ஆகியவற்றைப் பற்றிய பகுதிகளைக் குறித்துக் கொள்ளுங்கள்.

ஒவ்வொன்றையும் மனப்பாடம் செய்து மனத்தில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.

அவற்றை மீண்டும் மீண்டும் கூறி வாருங்கள். அப்போது, நீங்கள் உங்கள் ஆழ் மனத்திற்குக் கொடுத்துள்ள தன்னம்பிக்கையை உங்கள் ஆழ்மனம் உங்களுக்குத் திருப்பிக் கொடுக்கும்.

8.நம்பிக்கையான மக்களிடம் நட்புறவை வளர்த்துக் கொள்ளுங்கள்...

நேர்மறையான, விசுவாசத்தை உருவாக்கும் எண்ணங்களைச் சிந்திக்கும் படைப்புச் சூழல் உருவாவதற்குப் பங்களிக்கும் நண்பர்களை உங்களைச் சுற்றி வைத்துக் கொள்ளுங்கள்

இது நம்பிக்கை மனப்போக்கை மீண்டும் தூண்டும்.

9. தங்கள் சொந்தக் கவலைப் பழக்கத்தை விட்டொழிக்க...

உங்களால் எத்தனை பேருக்கு உதவ முடியும் என்று பாருங்கள்.

மற்றவர்கள் தங்கள் கவலைகளில் இருந்து மீள்வதற்கு நீங்கள் அதிக  சக்தியைப் பெறுவீர்கள்.

10.உங்கள் வாழ்வின் ஒவ்வொரு நாளும் கடவுளின் கூட்டாளியாகவும், நண்பனாகவும் வாழ்வதாகக் கற்பனை செய்யுங்கள்...

கடவுள் உண்மையிலேயே உங்களோடு நடந்து வந்தால், நீங்கள் கவலைப்படுவீர்களா? பயப்படுவீர்களா?

கடவுள் என்னோடு இருக்கிறார் என்று கூறுங்கள்.

நான் எப்போதும் உன்னோடு இருக்கிறேன் என்று சத்தமாக சுயபிரகடனம் செய்யுங்கள்.

பிறகு அதை மாற்றி நீ இப்போது என்னோடு இருக்கிறாய் என்று கூறுங்கள். தினமும் அந்த சுய பிரகடனத்தை  மூன்று முறை கூறுங்கள்.

உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறும்...

ஸ்டெர்லைட் ஆலை பினாமி திமுக...


YOU BE THE JUDGE:  தூத்துக்குடியில், கனிமொழி வேட்புமனு தாக்கல் செய்தபோது, ஸ்டெர்லைட் ஆதரவாளர் ஜான் அலெக்ஸாண்டர் கூட வந்தது ஏன்?

உணவே மருந்து - எளிய இயற்கை மருத்துவம்...


1) பூண்டு சாப்பிட்டீர்களென்றால்... உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.

2) சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம், கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

3) பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.

4) சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்... நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.

5) வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.

6) பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்... கண் நோய்கள் நெருங்காது.

7) சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.

8) பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.

9) தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்...

வேலூரில் மூட்டை மூட்டையாக சிக்கிய பணம், ஆவணம், சிக்கிய துரைமுருகன் உதவியாளர்.. கப் சிப் திமுக...


https://youtu.be/Ho8HdSDxakw

Subscribe The Channel For More News...