18/11/2021
தேன் நிலவு உருவான வரலாறு...
தேன் நிலவும் தவறான நம்பிக்கையும்...
நாம் தவிர்க்க முடியாத ஒரு விஷயமாக பார்ப்பது திருமணமான தம்பதிகள் கொண்டாட தேன் நிலவு ஏற்பாடு செய்வது.
தேன் நிலவு என்றால் இளம் தம்பதிகள் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள வேறொரு இடத்திற்கு அதாவது ஊட்டி கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு செல்வது.
இதை தான் நாம் தெரிந்து வைத்துள்ளோம்.
உண்மையில் இது பிழையானது.
தேன் நிலவு என்பது கிரேக்கர்களுடைய பழக்கம் இது தான் ஆங்கிலத்தில் ஹனி மூன் என்று வந்து.. நமக்கு தேன் நிலவாக மாறியுள்ளது.
ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒரே அர்த்தமாக இருக்கும்..
தேன் நிலவு - ஹனி மூன்..
இது எப்படி உருவானது தெரியுமா?
ஆரம்பத்தில் கிரேக்கர்கள் மாதத்தை கணக்கிட நிலவை வைத்தே கணிக்கிறார்கள்.. அரேபிய நாகரீகத்தை போல..
ஒரு முழு நிலவை கணக்கிட்டு அதிலிருந்து அடுத்த நிலவை ஒரு மாதமாக கணக்கிட்டு கொள்கிறார்கள்.
இந்த ஒரு மாதத்திற்கு அதாவது திருமணம் முடிக்க இருக்கும் தம்பதிகளுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே மஞ்சள் தேன் கலந்த ஒரு விதமான பானத்தை பருக செய்கிறார்கள்..
முக்கியமாக தேன்..
ஒரு மாதம் தேன் கலந்த பானத்தை தினமும் குடிக்க வேண்டும் பின்னர் தான் திருமணம்.
இது இவர்களது பழங்கால கலாச்சார வழிமுறை...
ஒரு நிலவில் இருந்து அடுத்த நிலவு வந்த பிறகு திருமணம்.
இது தான் தேன் நிலவு என்று ஆகிற்று ..
இன்றைய தேன் நிலவுக்கும் இவர்களுடைய பழக்கத்திற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா ?
நீங்களே யூகித்து கொள்ளுங்கள்...
வாழ்க்கை...
வாழ்க்கை
ரொம்ப விசித்தரமானது...
இங்கு
சிரிப்பவர்களை விட
சிரிப்பதை போல்
நடிப்பவர்கள் அதிகம்...
வாழ்க்கை வாழ
கற்று தருகிறதோ இல்லையோ..
நடிக்க
நன்றாக கற்று தருகிறது...
சங்கராச்சாரியார் கைகளில் உள்ள கோலுக்கு அர்த்தம் தெரியுமா?
வரலாற்றில் கோலின் முக்கியத்துவம்...
கோவிலின் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா?
சங்க காலத்து இலக்கியங்களில் ஆடிரை கவர்தல் என்ற வார்த்தைகள் வரும்.
இந்த ஆடிரை கவர்தல் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்றால் ஆடுகளை கவர்தல் என்று பொருள்.
உதாரணமாக இன்றைய காலத்தில் மிகப்பெரிய செல்வமாக மதிப்பது தங்கத்தை தான், ஆனால் அன்றைய காலகட்டத்தில் ஆட்டு மந்தைகளை தான் மிகப்பெரிய செல்வமாக கருதினார்கள்.
அப்படி ஒன்றை தான் ஆடிரை கவர்தல் என்கிறது தமிழ் இலக்கியம் கவர்தல் என்பதற்கு கூர்ந்து கவனிப்பது என்று கூட அர்த்தம் உள்ளது.
ஒரு ஆண் ஒரு பெண்ணை பார்வையால் கவர்ந்தான் என்பது கூட இப்படி தான்.
ஒரு நாட்டின் மீது அண்டை நாடு படையெடுத்தது என்றால் அண்டை நாட்டின் மிகப்பெரிய சொத்தான ஆட்டு மந்தைகளை தன்னுடையதாக்கி கொள்வதை தான் மிகப்பெரிய சொத்தாக எண்ணியுள்ளனர்.
அப்படி தனது ஆட்டை கவர்ந்து பாதுகாத்து கொள்வதை தான் ஆடிரை கவர்தல் என்று குறிப்பிடுகிறது சங்க கால இலக்கியம்.
மற்றுமின்றி ஆட்டிடையன் [ஆடு மேய்ப்பவன்] கையில் கோலை வைத்தது தமது ஆட்டை பாதுகாப்பான்.
இப்பொழுது பாருங்கள் அரசனுக்கு கோலன் என்ற வார்த்தையும் உண்டு.
இன்றைய காலகட்டத்தில் இந்த வார்த்தை இல்லையென்றாலும் கூட கோலன் என்ற வார்த்தைக்கு நேரடி அர்த்தம் அரசன் தான்.
இதை வைத்து தான்...
கோல் = கோன்மை
செங்கோண்மை கொடுங்கோண்மை என்பதெல்லாம் வந்தது.
உதாரணத்திற்கு நாம் அடிக்கடி சொல்லும் வார்த்தை கொடுங்கோலன் ஆட்சி.
இந்த கொடுங் கோலன் என்ற வார்த்தையை சிந்தித்தது உண்டா ?
நாம் கொடுங் மன்னனின் ஆட்சி என்று தானே கூற வேண்டும் ஏன் கொடுங் கோலன் ஆட்சி என்று சொல்லுகிறோம்..
காரணம் இது தான் கோலன் என்றால் அரசன் என்று பொருள்.
[இயேசு நாதரும் முஹம்மது நபியும். ஆடு மேய்த்துள்ளார்கள் அவர்கள் இருவருமே ஆட்சியாளராகவும் இருந்துள்ளார்கள்].
அடுத்த விஷயத்தை பாருங்கள்..
மகுடம் சூடுதல் அரசனுக்கான அடையாளம்..
கோல் நீதிக்கான அடையாளம்..
அதனால் தான் அன்றைய காலத்து அரசர்கள் நான் அரசன் என்பதற்க்காக மகுடம் சூடி கொள்வதும்..
நான் நீதியானவான் என்பதற்க்காக கையில் கோலை வைத்து இருந்தார்கள்..
அதாவது நான் நீதியான அரசன் என்றால் கையில் கோலையும் தலையில் மகுடத்தையும் வைத்து இருக்க வேண்டும் என்று அடையாளம்..
முடியும் கோளும் தான் மன்னவனின் அடையாளம், அதன் ஒரு பகுதி தான் முடிசூடா மன்னன்...
ஆன்மீகவாதிகள் என்று தங்களை சொல்லிக் கொள்ளும் பலரது கைகளில் இந்த கோல் இருப்பதை நீங்கள் பார்க்கலாம்..
ஜெகத் குரு முதற்கொண்டு சங்காராச்சார்யா மற்றும் காஞ்சி சங்கராச்சார்ய வரைக்கும் ஏன் குட்டி சாமியார் வரைக்கும் இந்த கோல் கைகளில் வைத்து இருப்பதை நீங்கள் பார்க்கலாம்.
இதற்கு நேரடியான அர்த்தம் என்ன தெரியுமா ?
லோகத்தில் பிராமணன் அல்லாத உள்ளவா அனைவரையும் தாம் தான். ஆட்சி செய்கிறோம் என்று அர்த்தம்.
அரசன் கைகளில் கோல் இருப்பது நீதிக்கான அடையாளம் என்று ஏற்கனவே சொன்னேன் அல்லவா..
இவர்கள் கைகளில் இந்த கோலில் பெயர் என்ன தெரியுமா ?
தண்டம் என்பார்கள்..
தண்டம் என்பதற்கு மறைமுக அர்த்தம் தண்டனை வழங்குவது, அதாவது பிராமணன் அல்லாதவருக்கு நான் தான் ஆட்சியாளன் அவனுக்கு தண்டனை வழங்கவே இந்த தண்டத்தை [கோலை] வைத்துள்ளேன் என்பதாக அர்த்தம்..
நேரடியாக கோல் என்றால் உனக்கு யார் இந்த அதிகாரத்தை கொடுத்தது என்று கேட்டு விடுவார்கள் என்பதற்க்காக தண்டம் என்கிறார்கள்.
இதற்கு இன்னும் ஒரு உதாரணம் கூட சொல்லலாம்...
இன்றைக்கு போலீசிடம் எவ்வளவு தண்டம் அழுத என்று வாய் வார்த்தைக்கு அர்த்தம்..
போலீசிடம் தண்டனை பணமாக எவ்வளவு கொடுத்த என்பதே பொருள்..
கோலன் என்பதற்கு இன்னுமொரு உதாரணம் சொல்லுகிறேன் பாருங்கள்..
அன்றைய காலத்து வாலிபர்கள் வித்யாசமாக ஆடை அணியும்பொழுது என்னடி இது கோலம் என்பார்கள், அதாவது அரசன் தான் மற்றவரை விட வித்யாசமானம் ஆடை அணிபவன்.
கோலன் என்பது அரசன்
கோவில் என்பது அரசவை
கோல் என்பது நீதிக்கான அடையாளம்
இந்த மூன்றையும் ஆரியர்கள் தங்கள் வசமாக்கி கொண்டனர்..
கோலனை மறைத்து விட்டார்கள்..
கோவிலை கடவுளின் இடமாக மாற்றிவிட்டார்கள்..
கோலை யும் அவர்கள் வசமாக்கி மறைமுகமாக நீதியை நிலை நாட்டும் ஆட்சியை செய்து கொண்டு இருக்கிறோம் என்பதாகவே அர்த்தம்..
உண்மையில் பாரம்பர்ய அடையாளம் அழித்தொழிக்கப்பட்டு கொண்டுள்ளது....
திமுக கொத்தடிமைகளை காணவில்லை...
திமுக ஆட்சிக்கு வந்ததுக்கு அப்புறம் நீட் எதிர்ப்பு போராளிகள், சினிமா போராளிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், டாஸ்மாக் எதிர்ப்பு போராளிகள், விவசாய போராளிகள், சமூக ஆர்வலர்கள்னு ஒரு கூட்டமே காணாம போயிருக்கு..?
யார்ரா நீங்க எல்லாம் 😏😒😒
ஒரு இனத்தின் வரலாற்றை அழித்த கொடூரம்1...
நீர் பெயரற்று, பதறி திட்டா, நிகமா, நாகனனம்...
தொலமி என்ற அறிஞரால் நிக்கல்வா என்றும்.
மார்கபோலோவால் பட்டான் என்றும்.
இத்சிங்காளால் நகவதனா என்றும்.
போர்துகீசியரால் நெக பட்டன் என்றும்.
ஆலந்து [ஹோலந்] காரர்களால் நேஹப்பட்டன் என்றும்.
ஆங்கிலேயரால் நேகபெட்டாம் என்றும்.
இன்று நாகப்பட்டினம் என்றும் இருக்கும் நாகப்பட்டினம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஊர்.
இதில் கொடுமை இதை அப்படியே மாற்றி விட்டனர்.
அதாவது இந்த பெயர் வருவதற்கு முன்பு பதறி திட்டா எனபது தான் நாகையின் உண்மையான பெயர்.
நிக்கோபார் தீவுகளை பற்றி படித்து இருப்பீர்கள் தானே..
இந்த நிக்கோபார் தீவுகளை பற்றி தமில் இலக்கியங்கள் நிக்கோ பாரை.. நாக நாடு என்று அழைகின்றார்கள்..
இங்கிருந்து புழம்பெயர்ந்து பதறி திட்டா வந்தவர்கள் தான் நாகர்கள்...
பிற்பாடு தான் நாகர் பட்டினம் என்ற பெயர் வந்தது..
இது 100 வருடத்தில் நடக்கவில்லை வம்சம் வம்சங்களாக இருந்து நடந்தது..
இந்நிலையில் புத்த மதம் தோன்றியது இவர்கள் புத்தமதத்தை தழுவினார்கள்...
மேலே சொன்ன அணைத்து வெளிநாட்டு அறிஞர்களும் இந்த நாகையை பற்றி கூற காரணம் தமிழகத்தில் நாகை தவிர்க்க முடியாத ஒரு ஊரு..
இதை தமிழ் இலக்கியங்களில் காவேரி பூம்பட்டினம் என்றும் குறிப்பிடுகிறது ...
துறைமுகம் விளைச்சல் போன்று எல்லாமும் இங்கு தான் நடக்கும்...
இப்படியுள்ள ஒரு ஊரை வட நாட்டு கும்பல் சிதைத்தது நாகர்கள் அழிவதற்கு இவர்கள் முக்கிய காரணம்...
தமது வயிற்ரை வளர்க்க நாகர் இனம் பாம்பின் இனம் என்றார்கள் ஆதி சேஷன் வாசுகி என்று இரண்டு கற்பனை பாத்திரத்தை உருவாக்கினார்கள் ....
நாகப்பட்டின சோழன் பிலத்துவாரத்தின் வழியே கீழ் உலகம் சென்று நாக கண்ணிகையுடன் உறவு மேற்கொண்டான்..
பிறகு நாக கன்னி கற்பம் தரித்து ஆண் மகனை பெற்றால் அவன் தான் நாகன் இனத்தின் முன்னோடி..
ஆகவே நாகர்கள் பாம்பின் பிள்ளைகள் அதாவது அவர்கள் கடவுள்கள்..
அப்படி கற்பனையாக உருவாக்கப்பட்டது தான் நாக கன்னி நாக நாதன கடவுள்கள்..
ஒரு இனத்தின் வரலாற்றை அழித்த கொடூரம்..
அதென்னங்கடா திமுக உபிஸ்...
இது த்ராவிடா பூமி, பெரியார் மண், கடவுள் மறுப்பு, ஆரிய எதிர்ப்பு, திமுகவில் இருக்கும் வரை கம்பு சுற்றி கொண்டு இருப்பது..
திமுகவில் பிரச்சனை என்றால் உடனே போய் சங்கிகளின் காலில் விழ வேண்டியது...
இது தான் த்ராவிடா கொள்கையோ?