19/05/2017

ஒரு இனத்தின் வரலாற்றை அழித்த கொடூரம்1...


நீர் பெயரற்று, பதறி திட்டா, நிகமா, நாகனனம்...

தொலமி என்ற அறிஞரால் நிக்கல்வா என்றும்.

மார்கபோலோவால் பட்டான் என்றும்.

இத்சிங்காளால்  நகவதனா என்றும்.

போர்துகீசியரால்  நெக பட்டன் என்றும்.

ஆலந்து [ஹோலந்] காரர்களால் நேஹப்பட்டன் என்றும்.

ஆங்கிலேயரால்  நேகபெட்டாம் என்றும்.

இன்று நாகப்பட்டினம் என்றும் இருக்கும் நாகப்பட்டினம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஊர்.

இதில் கொடுமை இதை அப்படியே மாற்றி விட்டனர்.

அதாவது இந்த பெயர் வருவதற்கு முன்பு பதறி திட்டா எனபது தான் நாகையின் உண்மையான பெயர்.

நிக்கோபார் தீவுகளை பற்றி படித்து இருப்பீர்கள் தானே..

இந்த நிக்கோபார் தீவுகளை பற்றி தமில் இலக்கியங்கள் நிக்கோ பாரை..  நாக நாடு என்று அழைகின்றார்கள்..

இங்கிருந்து புழம்பெயர்ந்து பதறி திட்டா  வந்தவர்கள் தான் நாகர்கள்...

பிற்பாடு தான் நாகர் பட்டினம் என்ற பெயர் வந்தது..

இது 100 வருடத்தில் நடக்கவில்லை வம்சம் வம்சங்களாக இருந்து நடந்தது..

இந்நிலையில் புத்த மதம் தோன்றியது இவர்கள் புத்தமதத்தை தழுவினார்கள்...

மேலே சொன்ன அணைத்து வெளிநாட்டு அறிஞர்களும் இந்த நாகையை பற்றி கூற காரணம் தமிழகத்தில் நாகை தவிர்க்க முடியாத ஒரு ஊரு..

இதை தமிழ் இலக்கியங்களில் காவேரி பூம்பட்டினம் என்றும் குறிப்பிடுகிறது ...

துறைமுகம் விளைச்சல் போன்று எல்லாமும் இங்கு தான் நடக்கும்...

இப்படியுள்ள ஒரு ஊரை வட நாட்டு கும்பல் சிதைத்தது நாகர்கள் அழிவதற்கு இவர்கள் முக்கிய காரணம்...

தமது வயிற்ரை வளர்க்க நாகர் இனம் பாம்பின் இனம் என்றார்கள் ஆதி சேஷன் வாசுகி என்று இரண்டு கற்பனை பாத்திரத்தை உருவாக்கினார்கள் ....

நாகப்பட்டின சோழன் பிலத்துவாரத்தின் வழியே கீழ் உலகம் சென்று நாக கண்ணிகையுடன் உறவு மேற்கொண்டான்..

பிறகு நாக கன்னி கற்பம் தரித்து ஆண் மகனை பெற்றால் அவன் தான் நாகன் இனத்தின் முன்னோடி..

ஆகவே நாகர்கள் பாம்பின் பிள்ளைகள் அதாவது அவர்கள் கடவுள்கள்..

அப்படி கற்பனையாக உருவாக்கப்பட்டது தான் நாக கன்னி நாக நாதன  கடவுள்கள்..

ஒரு இனத்தின் வரலாற்றை அழித்த கொடூரம்..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.