26/05/2017

இத்தாலி செய்த அல்லது திருடிய ஒரு வித்யாசமான நிகழ்வு...


குறிப்பு - 1...

இந்த பதிவுக்கு தலைப்பு வைக்க கொஞ்சம் நேரம் எடுத்து கொண்டேன்

அதாவது திருடியாவது தன மக்களை காக்க வேண்டும் என்ற இத்தாலி அரசை பாராட்டுவதா ?

அல்லது இந்திய அரசியல்வாதிகள் சிலரே கொஞ்சம் இவர்களை பார்த்து நீங்களே உங்களை செருப்பால் அடித்துக் கொள்ளுங்களேன் என்று வைக்கலாமா ?

அல்லது இத்தாலியின் கையாலாகாத தனம் என்று வைக்கலாமா என்று யோசித்தி பின்னர் மேலேயுள்ள அத்தலைப்பை வைத்துள்ளேன்..

குறிப்பு - 2...

இந்த சம்பவத்தை படித்தபின்பு இது சம்பந்தப்பட்ட இத்தாலி அரசை புகழ்வதா?

அல்லது இந்திய அரசை காறித்துப்புவதா?

அல்லது கோபம் கொப்பளிக்க அடுத்த பதிவை வாசிப்பதா என்பதை வாசிக்கும் ஒவ்வொருவர் உணர்வுக்கும் விட்டு விடுகிறேன் ...

மண்ணுடைய தன்மையை பூச்சிக் கொல்லிகள் தெளித்து அழித்து விட்டால் என்ன நடக்கும் என்பதற்கு ஐரோப்பா கண்டத்தில் உள்ள சில நாடுகள் உதாரணம் நீங்கள் இலண்டனின் வரலாற்றில் இதை காணலாம்..

1830 களில் இந்த சம்பவம் நடந்தது மண்ணில் உயிர் இல்லாததால் விளைச்சல்கள் இல்லாததை கண்டு இத்தாலி அரசே செய்வதறியாது தவித்து கொண்டு இருந்த நேரம்..

மண்ணின் சத்துக்களில் முக்கியமான நைட்ரஜன் சத்து சுத்தமாக இல்லை என்பதை கண்டு பிடித்தது ஆய்வுக்குழு ..

இது எப்படி மண்ணிற்கு கிடைக்கிறது என்பதை ஆய்வு செய்த குழு பின்னர் லண்டன் [இத்தாலி] அரசிடம் தன் ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது அதை வாசித்த அரசு மிரண்டு தான் போனது..

காரணம், அவர்கள் அதில் எழுதியது நம் மண்ணிற்கு நைட்ரஜன் சத்தை கொடுப்பது பிணமான மனித எலும்புகள் தான்.

ஆகவே இலண்டன் மற்றும் இத்தாலியின் விளைச்சலை விளைவிக்க மனித எலும்பு கூடுகள் தான் வேண்டும் என்றது அந்த ஆய்வு ...?

இப்பொழுது மனித எலும்பு கூட்டுக்கு எங்கே செல்வது ?

லட்சம் டன் கணக்கில் மனித எலும்புக்கு
எங்கே செல்வது ?

யோசித்த அரசு எடுத்த முடிவு தான் மனித எலும்பு கூடுகளை திருடுவது என்ற முடிவுக்கு வந்தது.

[இத்தாலிக்கு திருடுவது கைவந்த கலை தானே]

தம் அருகே உள்ள பகுதியில் எங்கெல்லாம் பெரும் போர்கள் வரலாற்றில் நடந்தேறியது அங்கே இறந்த மனிதர்களின் உடல்களை எந்த இடத்தில புதைத்தார்கள் என்ற ஆராய்ச்சியை செய்தது..

அதில் தேர்தெடுக்கப்பட்ட இடங்கள்...

நெப்போலியனுடன் போர் புரிந்த வாட்டர்லு, ஆஸ்ட்ராஸிஸ், போன்ற பிரமாண்ட போர்க்களத்தையம் லிப்ஸிக், கிரிமியா, போன்ற தீவுகளையும் சுற்றி வளைத்து மனித எலும்புகளை கொள்ளையடிக்க தொடங்கியது.

அதே போன்று சிசிலியின் பாதாள கல்லறையில் பல நூறு ஆண்டுகளாய் கிடைக்கும் எலும்புகள் என்று எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு சென்றது .

இப்படி ஒட்டுமொத்தமாக மனித எலும்புகளை அள்ளிக்கொண்டு லண்டனின் தலைநகர் இங்கிலாந்துக்கு இறக்குமதியான மனித எலும்புகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா ?

2,54,600 பவுண்டுகள்...

இதில் ஒரு கணக்கும் உள்ளது.

இவ்வளவு பவுண்ட் எலும்புகளும் அந்த அந்த மண்ணிலையே விட்டு இருந்தால் மக்கி போய் அங்குள்ள மக்கள் சுமார் 35 லட்சம் பேருக்கு உணவு தந்திருக்கும் என்கிறது வரலாறு..

இந்த 35 லட்சம் மக்களின் உணவை கொள்ளை அடித்த நாடு இத்தாலி..

அது மட்டுமல்ல இந்த 2,54,600 பவுண்டுகளும் எவ்வளவு நாளைக்கு தான் அவ்வளவு பெரிய இத்தாலி நாட்டுக்கு போதுமானதாக இருக்கும் ஆகவே இது தீர்வதற்குள் அடுத்த என்ன திட்டத்தை [திருடுவதை] செயல்படுத்தலாம் .

வேறு என்ன செய்யலாம் என்பதை ஒரு ஆய்வு அறிக்கையாக உருவாக்க ஒருவரை தேர்வு செய்தது இத்தாலி அரசு.

அவர் யார் என்பது கூட பெரிய விஷயம் இல்லை இவர் அடுத்து சொன்ன ஒரு பொருள் தான் ஆச்சர்யமானது ?

அது என்ன ? என்பதை பற்றி அடுத்த பதிவில் காண்போம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.