01/06/2017

மே 17 இயக்கம் திருமுருகன் காந்தி...


15.09.2016 அன்று கர்நாடகவில் தமிழர்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தேனாம்பேட்டையிலுள்ள இந்தியன் ஆயில் நிறுவனம் தாக்கப்பட்டதற்கு மூன்று தோழர்களை அப்போதே அரசு கைது செய்தது...

அவர்கள் பிணையிலும் வெளியே வந்துவிட்டார்கள்.

ஆனால் அந்த வழக்கில் சம்பந்தமே இல்லாமல் 8மாதங்களுக்கு பிறகு இப்போது தோழர் திருமுருகன் மீதும் தோழர் டைசன் மீதும் இரண்டு வழக்குகளை பிஜேபியின் பினாமி அரசு போட்டிருப்பதாக நேற்று சிறையில் வைத்து தோழர்களிடம் காவல்துறை கையெழுத்து வாங்கியிருக்கிறது.

உண்மையிலேயே இவர்கள் தான் தாக்கினார்களென்றால் அப்போதே இவர்கள் மீது வழக்கோ கைதோ செய்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை.

இப்போது சிறையிலிருக்கும் போது கையெழுத்து வாங்கி வழக்கு பதிகிறீர்களென்றால் இது உள்நோக்கத்தோடு போடப்படும் வழக்கு தானே...

இதற்கு மேல் என்ன ஆதாரம் வேண்டும் இந்த குண்டர் சட்டமே ஒரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்பதற்கு....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.