11/08/2017

இந்தியா - சீனா இடையே நிச்சயம் போர் வரும்போல் தான் இருக்கிறது...


கவுண்ட் டவுன் தொடங்கி விட்டது என்று சீனா அறிவித்து விட்டான் இந்த காலையில்.

நூறில் இருந்து எண்ணத் தொடங்குகிறானா , இல்லை இலட்சத்தில்  இருந்து எண்ணத்  தொடங்குகிறானா என்பது தான் தெரியவில்லை.

ஆனால் எதில் தொடங்கினாலும் கடைசியில் பூஜ்யத்துக்கு வந்துதானே ஆகவேண்டும்.  போருக்குப் பின் இந்தியாவின் நிலையும் அதுவாகத்தான் இருக்கும்..

இந்தியாவில் வந்து ஒளிந்து இருக்கும் தலாய்லாமா தான் ரொம்ப பதறுகிறார். சீனாக்காரன் எங்கே உள்ளே வந்து தன்னைப்  பிடித்துக்கொண்டு போய் விடுவானோ  என்ற அச்சம். அதனால் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று இந்தியாவுக்கு அவர் அறிவுரை சொல்லுகிறார். இந்தியாவுக்கு மட்டும் என்ன போர் செய்யவேண்டும் என்ற ஆசையா... வெளியே  என்னதான் உதார் பேசினாலும் உள்ளுக்குள் உதறல் இருக்கத்தானே செய்கிறது . ஆனால் பேச்சுவார்த்தை என்று வந்தால் அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகியவற்றை சீனா தனக்கு கேட்பானோ என்ற பயம் வேறு இருக்கிறது.

ஒன்று, பேசிப்  பிடுங்குவான், இல்லை அடித்து பிடுங்குவான். என்ன செய்ய என்று அஞ்சி நிற்கிறது இந்தியா. என்றாலும் அஞ்சி நாளுக்குள் போர் வருவது உறுதி தான்.

நீங்கள்  ஜாக்கிரதை. வெளியில் போகும்போது தலைக்கவசம் அணிந்து செல்லுங்கள். சீனாக்காரன் குண்டு போட்டு விடப்போகிறான் தலைமீது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.