03/08/2017

ஒரு நிகழ்ச்சி காரணமாக மதுரைக்கு கிளம்பிய கொளத்தூர் மணியை பாதி வழியில் மடக்கிய காவல்துறையினர்...


நீங்கள் மதுரைக்கு செல்லவேண்டாம்,  சென்னைக்குத் திரும்பி செல்லுங்கள் என்று சொன்னார்கள்.

எதற்கு என்று கொளத்தூர் மணி கேட்க, சமீபத்தில் நீங்கள் வீரத்தமிழர் ஐயா முத்துராமலிங்க தேவர் அவர்களை ஒருமையில் அவன், இவன், அவன் சிலைகளை உடைக்கவேண்டும்  என்று பேசி இருக்கிறீர்கள். இது கேட்டு மதுரை மக்கள் கோபமாக இருக்கிறார்கள். நீங்கள் அங்கே போனால் உங்கள் உயிருக்கு உத்திரவாதம் இல்லை . அதனால் தயவு செய்து  திரும்பி செல்லுங்கள் என்று சொல்ல, பயந்துபோன கொளத்தூர் மணி சென்னைக்கு ஓடி வந்து விட்டார்.

வரும் அக்டொபர்  மாதம் ஐயா பொன். முத்துராமலிங்க தேவர் குருபூஜை நிகழ்ச்சிக்கு கூட மு.க. ஸ்டாலினை அனுமதிக்கக்கூடாது என்று மதுரை மக்கள் முடிவு செய்து இருக்கிறார்கள்.

சசிகலா , தினகரன் உள்ளிட்ட தேவர் சமுதாயத்தினருக்கு எதிராக அவர் செய்துவரும் எதிர் செயல்களால் கோபமுற்றுக்  கிடக்கிறது தமிழர் தேவர் சமுதாயம்.

ஆகவே இந்தவருடம் ஸ்டாலின் கூட மதுரை தாண்டி செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.