27/09/2017

ஆதார் இருந்தால் தான் இனி திருப்பதி லட்டு...


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அறைகள், லட்டு பெற ஆதார் எண்ணை கட்டாயமாக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

திருப்பதி கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனையொட்டி பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் குறைந்த விலையில் தங்கி செல்ல விடுதி அறைகள் உள்ளன.

இந்நிலையில், முறைகேடுகளை தடுப்பதற்காக தரிசன டிக்கெட், அறைகள் மற்றும் லட்டு பெறுவதற்கு ஆதார் எண்ணை பயன்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் வெளிப்படையான சேவை நடைபெறும் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் சிறப்பு தரிசனத்தில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கும் விதமாக, மென்பொருள் தயார் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.