28/09/2017

என் தமிழினத்திற்கான என் கனவு...


ஈழத்திற்கும் தமிழகத்திற்கும் இடையிலான (ஆழம் குறைந்த) கடலை மண் போட்டு நிரப்பி நிலத்தொடர்பை ஏற்படுத்த வேண்டும்..

அதில் கடல் அடைபட்டுக் கிடக்காமலிருக்க மண் பரப்பில் நீரோட்டத்திற்கு ஓடை போன்று வழி விட்டு அதன்மேல் பாலம் கட்ட வேண்டும்..

தென்னிந்திய நிலப்பரப்பில் குறுகிய பகுதியில் ஒரு நேர்க்கோடு வரைந்து அதனை வடக்கு எல்லையாகக் கொள்ள வேண்டும்..

அதாவது தற்போதைய கர்நாடகாவின் Kondapura என்ற ஊருக்கு சற்று மேல் கடல் உள்வாங்கியுள்ள இடத்திலிருந்து சற்று சாய்வாக மேல்நோக்கி செல்லும் நேர்கோடு...

தற்போதைய ஆந்திராவின் Singarayakonda அருகே கடல் உள்வாங்கியுள்ள இடம் வரை வரையவேண்டும்..

இந்த கோடு நீளம் குறைவானதாகவும் ஏற்ற இறக்கம் அதிகம் இல்லாமலும் இருப்பதால் இதனை பாதுகாப்பது எளிது..

அதற்குத் தெற்கே இருக்கும் அனைத்தும் நமக்கு உரித்தானது.

இந்த பரந்த நிலத்தினை தனி நாடாக்கி, எவருக்கும் பணியாமல் முப்படையுடன் தமிழர் தம் சொந்த பலத்தினால் ஆள்தல்..

இதுதான் அகன்ற தமிழர்நாடு சங்ககாலத் தமிழகத்தின் மறு நிறுவல்..

வரலாற்றினை ஆராயாமல்
நியாய - அநியாயம் பற்றி சிந்திக்காமல் இத்தீர்வினை நோக்கி முன்னேறுதல்...

இது தான் நாம் அழிந்து போவதிலிருந்து தப்பிப் பிழைக்க ஒரே வழி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.