14/10/2017

காஞ்சிபுரம் பெருநகராட்சிக்குட்பட்ட தாமல்வார் தெரு மற்றும் மாதா கோவில் சந்திப்பு அருகே கழிவுநீர் குட்டை போல் தேங்கியுள்ளது...


இங்கு தனியார் பள்ளி மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. நகராட்சியின் பல்வேறு இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது  இ்ங்கு தேங்கியுள்ள கழிவுநீரால் தொற்று நோய்  பரவும்  அபாயகரமான சூழல் உருவாகி உள்ளது.

கழிவு நீர் தேங்கியுள்ளதால்  இந்த வழியாக கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவியர் மற்றும் பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

இது பற்றி பலமுறை புகார் அளித்தும் காஞ்சிபுரம் பெரு நகராட்சி நிர்வாகம்  இதை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக உள்ளது என பொதுமக்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள்  கோரிக்கை வைத்து உள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.