10/10/2017

கலவரத்தை தூண்டு விதமான அறிக்கை , பாஜக எச். ராஜா சர்மா மீது வழக்கு பதிவு செய்யலாம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு...


இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், சொத்து தகராறில் கொலை செய்யப்பட்ட நபரை, ஒரு குறிப்பிட்ட மதத்தினர் தான் கொலை செய்தார்கள் என எச். ராஜா சர்மா அறிவிக்கை விடுத்தார்.

போலிஸ் விசாரனையில் கொலை சொத்து தகராறில் நடைபெற்றுள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.

வேண்டுமென்றே இரு மதத்தினருக்கிடையே கலவரத்தை தூண்டும் விதத்தில் எச் ராஜா சர்மா அறிவிக்கை விட்டது கலவரத்தை தூண்டும் உள்நோக்கத்தோடு உள்ளது எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டது.

இதை விசாரித்த உயர் நீதிமன்றம் , புகாருக்கான முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் எச். ராஜா சர்மா மீது வழக்கு பதிவு செய்யலாம் என திருவல்லிக்கேணி காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.