12/10/2017

அரசு இயந்திரத்தில் பணம் பத்தும் செய்யும், செத்து போனவருக்கு மின் இணைப்பு, பலே தில்லாலங்கடி அதிகாரி...


திருப்பூர் மாநகரம் 18  வது வட்டம் நெருப்பெச்சல் வடக்கு பெரியபுதூர் திரு ஜெகதீசன் என்பவருக்கு செத்து போன அவரது தாத்தா பெயரில் பெருமாநல்லுர் தெற்கு பிரிவு மின்வாரிய அலுவலக வணிக ஆய்வாளர் பிரபாகரன் 3 பேஸ் மின் இணைப்பை வழங்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளார்.


பிரபாகரன் கேட்ட லஞ்சம் 20 ஆயிரம் , ஜெகதீசன் 16 ஆயிரம் மட்டுமே கொடுத்ததால் தில்லாலங்கடி வேலை செய்து செத்து போனவரின் பெயரில் 3 பேஸ் லைனிற்கு அனுமதி வழங்கப்பட்டு மீட்டர் வந்த போதிலும் பாக்கி 4 ஆயிரத்தை கொடுத்தால் தான் லைன கொடுப்பேன் என மின் வாரிய அதிகாரி பிரபாகரன்  கூறி வருவதாக பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.


செத்து போனவருக்கு லைன் கொடுக்க அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளதால் ஜெகதீசன் இதை வெளியே சொல்லி பிரச்சனை செய்து விடுவார் என அவரிடம் லைனை கேன்சல் செய்து கடிதம் எழுதிக் கொடுக்குமாறு அதிகாரிகள் கூறி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்...

செய்தி - சரன் , திருப்புர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.