09/11/2017

துறையூர் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி எதிரில் சாலையில் காணப்படும் மணலால் புழுதி படலம், அவதிப்படும் மக்கள்...


துறையூர் பேருந்து நிலையத்தில் இருந்து பிரிவு ரோடு வரை உள்ள சாலையில் அகற்றப்படாத மண்ணால் அந்த சாலையில் கடக்க முடியவில்லை..

சாலையில் மண் இருப்பதால்  வாகனங்கள் செல்லும் போது ஏற்படும் புழுதியால் சாலையில் செல்ல முடியவில்லை..

வாகனத்தில் வருவோர் ஹெல்மட் போட்டு வருவாங்க. சாலையில் நடந்து செல்வோரும் எப்படி ஹெல்மட் போடுவது.

அனைவராலும் கண்களை மூடி நடக்கவும் முடியாது , கண்களுக்கு கண்ணாடி வாங்க முடியாது அல்லவா....

மழைப்பொழிவுக்கு அடுத்த நாள் புழுதி புயலுக்கு பஞ்சமே இல்லை.. விரைவில் சாலையில் உள்ள மண்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா.. என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர் ...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.