22/12/2017

உலகம் வியந்த கணித மேதை சீனிவாச இராமானுஜன் பிறந்த தினம் இன்று...


தனது 33 வது வயதில் மரணம் அடைந்தார், உலக கணித வரலாற்றில் இவருக்கு நிகராக இன்னும் யாரும் பிறக்கவில்லை என்றால் அது மிகையாகாது.

ஈரோட்டில் பிறந்து கும்பகோணத்தில் வளர்ந்தார்.

3 வயது வரை இவர் பேசும் திறன் இல்லாமல் இருந்தார்.

ஆரம்பத்தில் இவரின் திறமையை கண்டு கொள்ளாத உலகம் அவரது வாழ்கையின் கடைசி காலகட்டத்தில் இராமானுஜத்தின் கணித ஆற்றலை பார்த்து உலகமே வியந்தது.

இவர் எழுதிய பல்வேறு தேற்றங்களுக்கான விடையை இன்னும் இந்த உலகம் இராமானுஜன் எப்படி இந்த விடையை கண்டு பிடித்தார் என்ற வழி தெரியாமல் திகைத்து நிற்கின்றது.

இவரது வாழ்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டுள்ளது. பார்ப்போரை திகைக்க வைக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.