14/12/2017

சென்னை மதுரவாயல் சட்டம்- ஒழுங்கு காவல் ஆய்வாளர் பெரியபாண்டி சுட்டுக்கொலை...


கடந்த நவ.16-ம் தேதி கொளத்தூரில் உள்ள நகைக்கடையில் 3.5 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
நகைக்கடையின் மேல்தளத்தை வாடகைக்கு எடுத்து, துளையிட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

கொள்ளை தொடர்பாக கொள்ளையர்களின் உறவினர் 4 பேர் நேற்று முன்தினம் சென்னையில் கைது செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் சென்னையிலிருந்து, ராஜஸ்தான் விரைந்தனர்.

நேற்றிரவு கொள்ளையர்களை சுற்றி வளைத்த போது, கொள்ளையர்களால் காவல் ஆய்வாளர் பெரியபாண்டி சுட்டுக்கொல்லப்பட்டார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.