02/12/2017

குழந்தைகளை கொல்ல சொட்டு மருந்து, தடுப்பூசி...


பிறந்த குழந்தைக்கு பெரிய அட்டவணை வைத்து கொண்டு  ஆயிரத்தெட்டு தடுப்பூசிகள் போடுகிறோம், போதாத குறைக்கு  இடையே சொட்டு மருந்துகள் வேறு..

இதுவெல்லாம் உயிர்கொல்லி நோயிலிருந்து பாதுகாக்க என்று நம்பியே நாம் செய்கிறோம். இருந்தும் ஏன் மாதம் மாதம் ஜுரம், வைரஸ் ஜுரம், வாந்தி, பேதி, மலேரியா என்று மருத்துவ மனைக்கு நடையா நடக்கிறோமே ஏன்?

நாம் பிள்ளைகளின் உடல் நலத்திற்கு நல்லது என்று நம்பி போட்ட தடுப்பூசி, சொட்டு மருந்து ஆகியவற்றின் பக்கவிளைவுகள் தான் இந்த ஜூரம், வாந்தி பேதி, மலேரியா போன்றவைகள் எல்லாம் என்றால் நம்ப முடிகிறதா?

நாம் நோய் வரக்கூடாது என்று போட்ட தடுப்பூசியில் இருப்பது அதே நோய் கிருமி தான்.

இதற்க்கு சில உதாரணங்களை பார்ப்போம்..

போலியோ சொட்டு மருந்து : போலியோ சொட்டு மருந்தால்தான் போலியோ உள்பட பல நோய்கள் ஏற்படுகின்றன. இந்த உண்மையை சொல்பவர் வேறு யாரும் அல்ல சொட்டு மருந்தை கண்டுபிடித்த ஜோனல் சால்க் தான். 1961ம் ஆண்டுக்குப் பின், அமெரிக்காவில் ஏற்பட்ட அனைத்து போலியோவுக்கும் காரணம் போலியோ சொட்டு மருந்துதான்.. என்று அமெரிக்க செனட் கமிட்டியில் இவர் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

அம்மை தடுப்பு மருந்து : அம்மை நோய்க்கான மருந்தை எட்வர்ட் ஜென்னர் என்பவர் கண்டு பிடித்தார். இந்த மருந்தை முதன் முதலில் தனது மகனுக்கு கொடுத்து தனது கண்டு பிடிப்பை நிரூபித்தார். மருத்துவ உலகால் இந்த மருந்து ஏற்று கொள்ளப்பட்ட பின்பு முதன் முதலில் மருந்து கொடுக்கபட்ட ஜென்னருடைய மகனும், இன்னொருவரும் மருந்தின் வீரியத்தால் மரணமடைந்தனர். இதுதான் உண்மை.

விபரீத தடுப்பூசிகள் தயாரிக்கப்படும் முறை..

அம்மை தடுப்பு ஊசி எப்படி தயாரிக்கிறார்கள் என்று பார்ப்போம்?

மனிதர்களுக்கு ஏற்படும் அம்மைக் கொப்புளங்களிலிருந்து வரும் சீழை எடுத்து பாதுகாத்து, பசுக்களுக்கு செயற்கையான காயங்களை ஏற்படுத்தி அந்த புண்களுக்குள் செலுத்துவார்கள். இதனால் இப்புண்கள் வழியே அதிகமான சீழ் வெளியேறத் தொடங்கும். இந்த சீழை எடுத்து அதோடு சில இருப்பு ரசாயனங்களைக் கலந்து அம்மை தடுப்பு மருந்தை தயாரிக்கிறார்கள்.

போலியோ சொட்டு மருந்து எப்படி தயாரிக்கிறார்கள் என்று பார்ப்போம்?

போலியோவை ஏற்படுத்தும் கிருமிகளை குரங்குகளின் சிறுநீரகத்தில் ஊசி வழியே செலுத்துகிறார்கள். சிறுநீரக சூழலிலேயே இந்தக் கிருமிகள் வளர்த்தெடுக்கப்பட்டு பின்னர் போலியோ சொட்டு மருந்தாக தயாரிக்கப்படுகிறது.

இப்படி மருந்து தயாரிக்கப் பயன்படும் குரங்குகள், உரிய சோதனைக்கு பிறகுதான் தேர்வு செய்யப்படுகின்றன. என்றாலும் சோதனைக்கு பின் குரங்குகளை ஏதவாது நோய் தாக்கினால் அவ்வளவுதான். இது புது நோயை ஏற்ப்படுத்தி விடும். இப்படியும் நடந்திருக்கிறது.

இதனால்தான் ‘இந்தியாவில் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதைத் தடை செய்ய வேண்டும்’ என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் டாக்டர் சத்யமாலா வழக்கு தொடர்ந்தார். ஆனால், அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

மஞ்சள் காமாலைக்காக விளம்பரப்படுத்தப்பட்ட தடுப்பூசியின் கதையைக் கேட்டால் வயிறு எரியும்..

ஹெர்படைட்டிஸ் ஏ, ஹெர்படைட்டிஸ் பி என மஞ்சள் காமாலையில் இருவகை உண்டு.
இதில் ஹெர்படைட்டிஸ் பி ஆட்கொல்லி நோய். ஆனால், தொற்று நோயல்ல. அதேபோல் பரவலாக வரக் கூடியதும் அல்ல. அபூர்வமாகவே மனிதர்களை தாக்கும் இந்த ஹெர்படைட்டிஸ் பி-க்கான தடுப்பூசி மிகவும் வீரியமிக்கது. அதேசமயம் ஹெர்படைட்டிஸ் ஏ சாதாரண மஞ்சகாமாலை நோய் இதை எளிய உணவு முறைகள் மூலம் சரி செய்யலாம்.

உண்மை இப்படி இருக்க இந்த நோயை பெரிய ஆட்கொல்லி நோய் போலவும், அந்நோய் வந்தவர்கள் எளிதில் மரணமடைவார்கள் என்பது போலவும் விளம்பரம் செய்யப்பட்டு ஹெர்படைட்டிஸ் ஏ வந்தவருக்காக கண்டுபிடிக்கப்பட்ட வீரியமிக்க மருந்தை ஹெர்படைட்டிஸ் பி கொடுக்கின்றனர். இப்படி செய்வது பெரிய பக்கவிளைவுகளை ஏற்ப்படுத்தும்.

1990களில் அமெரிக்காவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் மஞ்சள் காமாலை தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும் என்ற சட்டம் நடைமுறையில் இருந்தது. இது குறித்து 1997ல் நடத்தப்பட்ட அமெரிக்க அரசின் ஆய்வில் மஞ்சள் காமாலை தடுப்பூசியும், அம்மைத் தடுப்பூசி போன்றவை 13 விதமான புதிய நோய்களை ஏற்படுத்தும் என்கிற உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.

வலிப்பு, ஜன்னி, கண்பார்வை பாதிப்பு, மூளைக் காய்ச்சல் போன்றவை இதில் அடங்கும். உடனே அமெரிக்க அரசு கட்டாய தடுப்பூசி சட்டத்தை அவசரமாக நீக்கியது.

இதனால் ஏராளமான தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்து வைத்திருந்த அமெரிக்க மருந்துக் கம்பெனிகள் அதிர்ந்தன. இந்த மருந்தை என்ன செய்வது? தனது நாட்டு மருந்து கம்பெனிகளின் துயர் தீர்க்க முன்வந்தார் பில்கேட்ஸ். தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் ஆந்திர மாநிலத்தில் 4.5 லட்சம் குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை தடுப்பூசிகளை இலவசமாக போட்டார். இந்த தடுப்பூசி அமெரிக்க நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்பட்டு, அமெரிக்க அரசால் 1997ல் தடை செய்யப்பட்டவை.

தடுப்பூசிகளை ஆதரிப்பவர்கள் என்ன சொல்கிறார்கள்?

முன்பெல்லாம் கொள்ளை நோய்கள் மக்களை கூட்டம் கூட்டமாக தாக்கியதே… தடுப்பூசிகள் வந்ததற்கு பின்னால்தானே கொள்ளை நோய்கள் கட்டுக்குள் வந்தன? நம் மனதில் இப்படித்தான் பதிய வைக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், உண்மை இதுமட்டுமே அல்ல. பல தீவிரமான கொள்ளை நோய்களை தடுப்பூசிகள் தடுத்து நிறுத்தியதை காட்டிலும் தடுப்பூசி என்னும் பெயரில் பன்னாட்டு நிறுவனங்கள் நடத்தும் வணிகமும், இதனையடுத்து தோன்றியுள்ள புதுப்புது நோய்களும் மிக அதிகம்.

2009ம் ஆண்டு சீனாவிலிருந்து உலகம் முழுக்க சார்ஸ் (பறவைக்காய்ச்சல்) பரவுவதாக பிரசாரம் செய்தார்கள். இந்த சளிக்காய்ச்சலை கட்டுப்படுத்தவோ, பரவாமல் தடுக்கவோ எந்த மருந்தும் கண்டுபிடிப்பதற்கு முன்பே அக்காய்ச்சல் படிப்படியாக குறைந்தது.

இதேநிலைதான் இந்தியாவில் ஏற்பட்ட சிக்குன்குனியா காய்ச்சலுக்கும் ஏற்பட்டது.

பன்றிக்காய்ச்சலையே எடுத்துக் கொள்வோம். ஏதோ கொள்ளை நோய் போல உலகம் முழுவதும் பேசப்பட்ட இந்நோய்க்கான தடுப்பு மருந்து தாமிஃப்ளூ விற்பனைக்கு வரும் முன்பே இந்நோய் குறைந்துவிட்டது.

எந்தவொரு நோயானாலும் மக்களின் உடல் நிலை மற்றும் சுற்றுப்புற சமூக காரணிகளை வைத்து தானாகவே ஏற்படும். குறிப்பிட்ட இடைவெளியில் தானாகவே மறையும் இதுவே நிதர்சனமான உண்மை.

அதாவது புகைப்பிடிப்பது உடல் நலத்துக்கு கேடு.. என்று அச்சிடுகிறார்கள் இல்லையா?

அதேபோல் தடுப்பூசி மருந்துடனும் சில எச்சரிக்கைகளை பன்னாட்டு நிறுவனங்கள் அச்சிடுகின்றன. அவை என்ன தெரியுமா?

1. அதிகப்படியான காய்ச்சல் (105 டிகிரி அல்லது அதற்கு மேல்).
2. மந்தமாக இருத்தல்; நீடித்த அசதி.
3. மூளை வளர்ச்சி குறைபாடு; மூளை பாதிப்பு.
4. எப்போதாவது வலிப்பு; மயக்கம்.
5. கண் நரம்புக் கோளாறுகள்; நரம்பு தொடர்பான நிரந்தக் கோளாறுகள் …

ஆகியவை தடுப்பூசிகள் போட்டுக் கொண்டால் ஏற்படலாம் என எச்சரிப்பது அந்த தடுப்பூசி தயாரித்த நிறுவனங்கள் தான்.

அதுமட்டுமல்ல, உச்சபட்ச விளைவாக SIDS (Sudden Infant Death Syndrom) ஏற்படுத்துவதாக தடுப்பூசியை தயாரிக்கும் நிறுவனங்கள் சொல்கின்றன.

இதன் அர்த்தம் என்ன தெரியுமா?

குழந்தை திடீரென இறந்து போகும். ஆனால், எந்த மருத்துவரும் இதைக் குறித்து நோயாளிகளிடம் சொல்வதில்லை…

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.