26/01/2018

பிப்ரவரி 10, 11-ஆம் தேதிகளில் சைக்கிள் பந்தயம்...


கோவையில் வரும் பிப்ரவரி 10, 11-ஆம் தேதிகளில் சர்வதேச சைக்கிள் பந்தயம் நடைபெற உள்ளது.

 பினாக்கிள் விளையாட்டு நலச் சங்கம்,  தமிழ்நாடு சைக்கிளிங் சங்கத்துடன் இணைந்து 5-ஆவது எம்.வி.எஸ். சைக்கிளிங் கார்னிவல் 2018 என்ற சர்வதே சைக்கிள் போட்டியை நடத்துகிறது. செட்டிபாளையத்தில் உள்ள கரி மோட்டார்ஸ் ஸ்பீடு வேயில் இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன.

 இந்தப் போட்டிகள் சைக்கிள் விளையாட்டு வீரர்கள், வீரர்கள் அல்லாத ஆடவர், பெண்கள், 18 வயதுக்குள்பட்ட குழந்தைகள், ஆண்கள், பெண்கள்,  35-வயதுக்கு மேற்பட்டவர்கள், 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்ற பல்வேறு பிரிவுகளில் நடைபெறுகின்றன.

 ஒட்டு மொத்த பரிசுத் தொகையாக ரூ.2.40 லட்சம் வழங்கப்படுவதாகவும், இதில் பங்கேற்க விரும்புபவர்கள் ஜனவரி 31-ஆம் தேதிக்குள் தங்களது பெயர் விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு W​W​W.​M​V​S​C​Y​C​L​I​N​G​C​A​R​N​I​V​A​L.​C​OM என்ற இணையதளத்தைக் காணலாம் என்றும் போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.