01/05/2018

காவலர் தேர்வுக்கு சென்றவர்களின் நெஞ்சில் சாதி அடையாளம்...


மத்திய பிரதேச மாநிலத்தில் காவலர் தேர்வுக்காக வந்திருந்த தேர்வர்களின் நெஞ்சில் சாதிப்பிரிவை எழுதி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அம்மாநிலத்தின் தார் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில், காவலர் பணிக்கு தேர்வானவர்களுக்கான மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

தேர்வுக்காக உள்ளாடையுடன் காத்திருந்த இளைஞர்களின் நெஞ்சில் சாதிப்பிரிவை குறிப்பிடும் வகையில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. என எழுதப்பட்டிருந்தது.

இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறியுள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.