17/06/2018

தூத்துக்குடியில் காவல்துறையைக் கண்டித்து வருகிற 21ம் தேதி உ்ண்ணா விரத போராட்டம் நடத்தப்படும் என வழக்கறிஞர்கள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது...


தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இடைக்காலத் தலைவர் ஏ.டபிள்யூ.டி. திலக் தலைமை வகித்தார். கூட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியான 13பேருக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும், தூத்துக்குடியில் வீடுவீடாக சோதனை நடத்தி பொதுமக்களை கைது செய்து வரும் காவல்துறையின் நடவடிக்கைகளை கண்டித்து வருகிற 21ம் தேதி நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதில், வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் முருகன், இக்னேஷியஸ், பொன்ராஜ், ராமசந்திரன், உட்பட பலர் கலந்து கொண்டனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.