30/06/2018

சாலையை சேதப்படுத்தும் அதிமுக...


இந்த இடம் சிதம்பரம் அருகில் உள்ள வண்டிகேட் பகுதி. சிதம்பரத்தில் அதிமுக சார்பாக காவிரி நதி நீர் வழக்கை வென்றெடுத்ததன்(அவங்களே சொல்லிக்கிறாங்க) விளக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இதற்காக யார் வரப் போகிறார்கள் என்று தெரியவில்லை, ஆனால் கட்டவுட், தோரண வாயில், பேனர் அடிக்க என்று சாலையை சேதப்படுத்தி வருகின்றனர். இதற்காக சாலையில் பள்ளமிட்டு அதல் கம்புகளை நட்டு வருகின்றனர்.

இதெல்லாம் யாருடைய பணம்... அனைத்தும் மக்கள் வரிப்பணம்... அவர்களுக்கா அக்கரை வந்துவிடப் போகிறது.

ஏற்கெனவே சிதம்பரத்தின் அனைத்து சாலைகளும் பாதாள சாக்கடை தோண்டுவதாக கூறி சேதப்படுத்தி கடந்த ஒரு வருடமாக சரி செய்யாமல் உள்ளனர் இந்த மங்குனிகள் காண்ட்ராக்டர்கள். இதை கடந்த ஒரு வருடமாக சகித்துக் கொண்டு ஸ்டெர்லைட் பிரச்சினைக்காக போராடும் சிதம்பரம் மக்களின் மனநிலையை பாராட்டியே ஆகவேண்டும்.

இவ்வளவு நாள் சாலையின் நடுவே இருந்த பெரிய பள்ளங்களையே சகித்துக் கொண்ட மக்கள் இந்த சிறுயையும் நிச்சயம் சகித்துக் கொள்வார்கள். மக்களின் பொறுமை ஓங்குக...

இப்படியே நாம இருந்தா... இந்த மாதிரி மங்குனிங்க தான் 100 வருஷம் ஆனாலும் ஆட்சி பண்ணும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.