08/07/2018

பிரபஞ்ச நாடோடி (Silver Surfer)...


வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்கள் இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உணடு.
வேற்றுகிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு பெரும்பாலான விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட ஆம் எனறே பதிலளித்து வருகின்றனர்.

தாமஸ் ஹேர் என்ற விஞ்ஞானி வேற்றுகிரகவாசிகள் நமக்கு அருகிலோ, வெகு தொலைவிலோ நம்மை போலவே ஒரு கூட்டம் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறும் இருக்கிறது. ஆனால், அவர்கள் உணவு சாப்பிட்டு, தண்ணீர் குடித்து நம்மை போலவே இருப்பார்களா என்பது சந்தேகம். அவர்கள் வேறு மாதிரியாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது. ஒருவேளை, அப்படி யாராவது எங்காவது இருந்தால் நம்மை கண்டுபிடிப்பதும் சிரமம் அல்ல. அவர்களது இடத்தில் இருந்து பயணிக்க தொடங்கியிருந்தால் 500 ஆண்டுகளிலேயே நம்மை அடைந்திருக்கலாம் என கூறி உள்ளார்.

இந்த நிலையில் பிலெய்டன் என அழைக்கப்படும் வேற்றுகிரகவாசிகள் வடமேற்கு அர்ஜென்டினாவில் இருந்து 70 மைல் தூரத்தில் இருக்கும் மலைப்பகுதிகளில் வாழ்ந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பறக்கும் தட்டுகள் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் யுஎப்ஓ சார்ந்த பத்திரிக்கையில் தெரிவிக்கபட்டு உள்ளது. அர்ஜென்டினாவில் மொத்தம் 30 பிரிவினர் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் மற்ற பிரிவினர் பிரபஞ்சத்தின் மூலைகளில் இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.


வேற்றுக்கிரக புத்திஜீவிகள் தொடர்பிலான ஆய்வுகளும் மர்மங்களும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது. ஆனால் அறிவியல் அறிந்த, கண்டுபிடித்த உண்மைகள் மட்டும் வெளிப்படுத்தப்படுவதில்லை.
அந்த வகையில் பூமிக்கு வேற்றுக்கிரக வாசிகளின் வருகைகள் இடம்பெற்று வந்ததாகவே விண்வெளி தொடர்பில் ஆய்வு செய்பவர்களின் நம்பிக்கை.
அதற்கான ஆதாரத் தேடல்களுக்கு மட்டும் குறைவில்லாமல் தொடர்ந்தும் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன.

அந்த வகையில் சிலி நாட்டு மலைப்பகுதியில் சராசரி மனித உயரம் கொண்ட மனித உடலமைப்பை ஒத்த எழும்புக் கூடு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது. ஆஸ்கர் முனோல்ஸ் என்பவர் இதனை கண்டுபிடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து இது குறித்த ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டன. அதனால் மேலும் பல எலும்புக்கூடுகளும் கண்டு பிடிக்கப்பட்டன.

பின்னர் ஸ்டீவன் கீரீயர் எனப்படும் ஆய்வாளர் மற்றும் எலும்பியல் டி.என்.ஏ நிபுணர் மூலமாக ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது. அதில் கிடைத்த ஆய்வு முடிவுகள் ஆச்சரியம் அளித்துள்ளது.

அதாவது குறித்த எலும்புகளோடு பூமிக்கு சம்பந்தப்படாத உலோகம் கலந்துள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. பின்னர் இதன் ஆய்வுகள் வேற்றுக்கிரகங்கள் தொடர்பில் ஆய்வு செய்பவர்களோடு இணைத்துக்கொள்ளப்பட்டு, வேறு கோணங்களில் ஆய்வுகள் நடாத்தப்பட்டுள்ளன.

அந்த ஆய்வுகள் மூலம் குறித்த எலும்புகள் வேற்றுக் கிரகவாசிகளுடையவை எனவும் அவர்கள் பூமிக்கு வந்து சென்றுள்ளார்கள் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த உயிரினம் சிரியஸ் எனப்படும் நட்சத்திரத் தொகுதிக்கு உரியவையாக இருக்கலாம் என்றும் அவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் இவை வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற மிகப்பெரிய ஆதாரம் அதனால் வேற்றுக் கிரகவாசிகள் இருப்பது உண்மை எனவும் ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.