25/08/2018

மிருகத்தின் மேல் ஒரு ஸ்திரீ.. ஐரோப்பிய பாபேல் கோபுரம்...


நீ கண்ட பத்துக் கொம்புகளும் பத்து ராஜாக்களாம், இவர்கள் இன்னும் ராஜ்யம் பெறவில்லை, இவர்கள் மிருகத்துடனே கூட ஒருமணி நேரமளவும் ராஜாக்கள்போல அதிகாரம் பெற்றுக் கொள்ளுகிறார்கள்.(வெளிப்படுத்தின விசேஷம் 17:12)

மேலே பத்து ராஜாக்கள் என்று சொல்லப்படுவது ஐரோப்பா கண்ட அதிபர்களை குறிக்கிறது. இவர்கள்தான் ஒரே யோசனைக்காரர்கள். 
(வெ.வி 17:17)

அந்த பத்து ராஜாக்கள்
ரஷ்யா
பிரிட்டன்
பிரான்ஸ்
ஜெர்மனி
இத்தாலி
கிரீஸ்
பெல்ஜியம்
டென்மார்க்
அயர்லாந்து
வாடிகன்.

இவைகளில் ரஷ்யா பலம் வாயந்த நாடு. தானியேல் தீர்க்கதரிசியால் சொல்லப்பட்ட கரடி – இப்போதைய ரஷ்யா.

இந்த ஐரோப்பியர்கள் ஒன்றுச்சேர்ந்து ஐரோப்பிய யூனியன் அமைப்பு ஏற்படுத்தி யூரோ என்ற பொதுவான நாணயத்தை வைத்துள்ளனர். இதன் தலைமையகம் புரூசல்ஸ்- பெல்ஜியத்தில் உள்ளது. இது வைரங்களுக்கு பெயர்போன வர்த்தக நகரம். இந்த கட்டிடத்திற்க்கு முன்பாக ஒரு சிலை உள்ளது. ஒரு ஸ்திரீ மாட்டின்மீது அமர்ந்திருக்கும் சிலை.


இதை வெ.வி. புத்தகம் 17: 3 ல் காணலாம். அந்த ஸ்திரீ பாபிலோனிய
(அசுத்த ஆவி)யை குறிக்கிறது. 
மாடு – மிருகம் வர்த்தகத்தை
( Bull Market) குறிக்கிறது. இந்த ஸ்திரீயானவள் ஐரோப்பிய ராஜாக்களின் வர்த்தகத்தை கட்டுப்டுத்தக்கூடியவளாக இருக்கிறாள்.

ஆவிக்குள் என்னை வனாந்தரத்திற்குக் கொண்டுபோனான். அப்பொழுது ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையும் உடையதும் தூஷணமான நாமங்களால் நிறைந்ததுமான சிவப்புநிறமுள்ள மிருகத்தின்மேல் ஒரு ஸ்திரீ ஏறியிருக்கக்கண்டேன். (வெளி.  விசேஷம் 17 :3)

ஐரோப்பிய பாபேல் கோபுரம்...

இந்த ஐரோப்பா யூனியன் கட்டிடத்தை பார்த்தீர்களினால் நிம்ரோத் கால பாபேல் கோபுரம் போலவே இருக்கும். நிம்ரோத் காலத்தில் மக்கள் தங்களுக்கென வானுயர கோபுரம் கட்டி உயர்த்த நினைத்தார்கள். வரலாற்றின்படி நிம்ரோத் ராஜாவாக பராக்கிரம சாலியாக இருந்திருக்கிறான். நிம்ரோத் பலத்த வேட்டைக்காரன் என்று சொல்லுகிறது.  தன் ராஜ்யத்தை பெரிதாக்க நினைத்து கட்ட ஆரம்பித்தான்.

ஆனால் கர்த்தர் அவர்கள் பேசிய ஒரே மொழியை தாறுமாறாக்கி பூமி முழுதும் சிதறடித்தார். இந்த வம்சாவழி ஆவியுடையவர்களே தற்போது இந்த கட்டிடத்தை கட்டியுள்ளதை அறிய முடிகிறது.

இன்னொன்று, இந்த யூனியனின் பார்லிமென்ட் கட்டிடத்தில் உள்ள அவைக்கூடத்தில் (பாபேல் டவர் என
அழைக்கப்படுகிறது) மொத்தம் 673 சீட்டுக்கள் (நாற்காலி) உள்ளன. அரைவட்ட வடிவில் நாற்காலிகள் வரிசையாக அமைக்கப்பட்டுள்ளது.


அந்த 666ம் நாற்காலி யாருக்கானது என்பதை பார்ப்பதற்க்கு முன்பு
இங்கு ஒரு வசனம் கூறியாக வேண்டும்.

தேவன் தம்முடைய வார்த்தைகள் நிறைவேறுமளவும், அவர்கள் தமது யோசனையை நிறைவேற்றுகிறதற்கும், ஒரே யோசனையுள்ளவர்களாயிருந்து, தங்கள் ராஜ்யத்தை மிருகத்திற்குக் கொடுக்கிறதற்கும் அவர்களுடைய இருதயங்களை ஏவினார்.

அந்திக்கிறிஸ்துவிடம் அதிகாரம் பெற்றுக்கொள்பவர்கள். ஆதரிப்பவர்கள். அவனின் 7 வருட ஆட்சியில் 666 முத்திரையை பதித்து கொள்ளுபவர்கள். இந்த அந்திக்கிறிஸ்து சாத்தானின் ஆவியுடையவன்.

673 நாற்காலிகள் இப்படி ஓதுக்கப்பட்டுள்ளது.

660 Marchiani

661 Montfort

662 Quiero

663 Souchet

664 Thomas-Mauro

665 Zizzner

666 –

667 Cappato

668 Turco

669 Bonino

670 Pannella

671 Dupuis

672 Della Vedova

666 எண் யாருக்கும் ஒதுக்கப்படவில்லை. இதிலே ஞானம் விளங்கும், அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக்கடவன், அது மனுஷனுடைய இலக்கமாயிருக்கிறது, அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு.   (வெளி.விசேஷம் 13 :18)

வலதுகையிலும் நெற்றியில் குத்தப்படும் முத்திரையும் 666.

சீட் எண் 666 ம் காலியாக உள்ளது.

இந்த 666 க்காரனை வரவேற்க ஒரே யோசனையுள்ளவர்கள் என வேதம் சொல்லும் ராஜாக்கள் தயாராயாய் இருப்பதைப் பாருங்கள். உலகத்தில் நம் கண்கள் முன்பே நடந்து வருகிறதை பாருங்கள்.

அக்கிரமக்காரன் (அந்திக்கிறிஸ்து) வெளிப்படுவான். அவனைக் கர்த்தர் தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, தம்முடைய வருகையின் பிரசன்னத்தினாலே நாசம் பண்ணுவார்.
(2 தெசலோனிக்கேயர் 2 :8)

இந்தியாவில் அரசியல் பற்றியே ஊடகங்கள் செய்திகளை போட்டு உலகில் நடப்பதை வெளிச்சத்திற்க்கு கொண்டுவராமலும் அந்த பாபிலோன் காலத்திலேயே நாம் வாழ்ந்துக் கொண்டிருப்பதை மறைக்கின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.